பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவோம், என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதி ஆதாரங்களை கண்காணித்து தடுப்பதற்கான பணிகளை சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) செய்து வருகிறது. பல்வேறு நாட்டு அரசுகளின் கூட்டமைப்பாக இது செயல்படுகிறது.

தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூனில் அந்நாட்டை கிரே பட்டியலில் சேர்த்தது. இதனால், பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும், கடன் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 16ந் தேதி முதல் 6 நாட்களுக்கு இந்த அமைப்பின் ஆய்வு கூட்டம் அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ நகரில் நடந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி ஆதாரம் செல்வது குறித்து எஃப்ஏடிஎஃப் அமைப்பிடம் இந்தியா சார்பில் புதிய ஆதாரங்களை அளித்தது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான நடிவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு இருந்த 10 அம்ச செயல்திட்டம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.
ஆனால், குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தீவிரவாதிகள் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஃப்ஏடிஎஃப் அமைப்பு கூறியுள்ளது.
இல்லையெனில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றிலிருந்து நிதி உதவி மற்றும் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
தற்போதே பாகிஸ்தான் அரசு பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகும் நிலை ஏற்படும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications