"வீடியோ கேம் மூலம் பிறந்த குழந்தை.." இனி குழந்தையின்மை பிரச்சினையே இல்லை.. வாவ் சூப்பர் தான்
வாஷிங்டன்: உலகெங்கும் குழந்தையின்மை இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் விந்தணு ரோபோ மூலம் வெற்றிகரமாகக் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்த நவீன உலகில் துரித உணவுகள், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டே வருகிறது. இதனால் முன்பு அரிதாக இருந்த உடல்நிலை பாதிப்புகளும் பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாகக் குழந்தையின்மை என்பது உலகெங்கும் முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. குழந்தையின்மை பிரச்சினையைச் சரி செய்ய இப்போது பலரும் பல விதமான ஆய்வுகள் நடந்தே வருகிறது.

குழந்தை: புதுப்புது முறைகளைப் பயன்படுத்தி இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டே வருகிறது. இதனிடையே விந்தணுக்களை மைக்ரோ ரோபோக்கள் மூலம் அனுப்பப்படும் சோதனை முறை இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை முறையில் கருவுற்ற முதல் பெண் இப்போது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இது விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) சிகிச்சைக்கான செலவை வெகுவாக குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே இருக்கிறது. ஸ்பெயின் பார்சிலோனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, நியூ யார்க் நகரத்தில் உள்ள நியூ ஹோப் ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் விந்தணுக்களை முட்டைக்குள் செருக ரோபோடிக் ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த செயல்முறை மூலம் இரண்டு ஆரோக்கியமான கருக்கள் உருவாகிய நிலையில், இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

கருவூட்டல் ரோபோ: உலகின் முதல் கருவூட்டல் ரோபோவில் பணிபுரியும் பொறியாளர்களில் ஒருவருக்குக் கருவுறுதல் துறையில் அதிக அனுபவமே இல்லையாம். இது குறித்து மேலும் கூறுகையில், "கருவுறுதல் துறையில் அனுபவம் இல்லாத பொறியாளர் ஒருவர், ரோபோ ஊசியை நிலைநிறுத்த பிளே ஸ்டேஷன் 5 என்ற வீடியோ கேம் கண்டிரோலரை பயன்படுத்தினார். கேமரா மூலம் முட்டை எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்துள்ளனர். அது தானாகவே முன்னோக்கி நகர்ந்து, முட்டையை ஊடுருவி, ஒரு விந்தணுவை மட்டும் வெளியேற்றியுள்ளது" என்றார்.
இதனால் ஆய்வில் ஈடுபட்ட இருவர் கர்ப்பமடைந்தனர். கர்ப்ப காலத்திலும் அவர்களின் உடல்நிலை சீராக ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் இந்த முறையில் கருவுற்ற பெண்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் நிச்சயம் செயற்கை கருவுறுதல் முறையின் செலவைக் குறைக்கும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செலவைக் குறைக்கும்: விந்தணுவைச் சுமந்து செல்லும் இந்த ரோபோவை ஓவர்ச்சர் லைஃப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. செயற்கை முறையில் கருத்தரிக்கும் IVF தொழில்நுட்பத்தை ஆட்டோமேட்டிக் நிகழ்வாக மாற்றுவதே இவர்கள் வேலையாகும். இதன் மூலம் செயற்கை கருவுறுதல் சிகிச்சைக்கான செலவு கணிசமாகவே குறையும். தற்போது, IVF மூலம் சிகிச்சை பெற லட்சக் கணக்கில் செலவாகிறது.

இதற்கு மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தி முட்டை மற்றும் விந்தணுக்களைக் கையாளும் பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் இந்த செயல்முறை அதிக செலவை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் இந்த IVF மூலம் சுமார் 5,00,000 குழந்தைகள் பிறக்கின்றன, ஆனால் இதன் விலை அதிகம் என்பதால் பலருக்கும் இதற்கான வாய்ப்பு வசதி அமைவதில்லை.
மிகப் பெரிய புரட்சி: இது குறித்து ஆய்வாளர் சாண்டியாகோ முன்னே கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பம் இப்போது தான் தொடக்க நிலையில் இருக்கிறது. ஆனால், இதுதான் IVF சிகிச்சையின் அடுத்தகட்டம். இது வளர்ந்து ஒரு நாள் நோயாளிகள் கருவுறுதல் கிளினிக்கிற்குச் செல்வதற்கான தேவையையே நீக்கிவிடும். செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கப் பல லட்சம் செலவாகும் நிலையில், அந்த நிலையை இது நிச்சயம் மாற்றும்.. கருவுறுதலில் பிரச்சினை இருக்கும் பலருக்கும் இது நிச்சயம் உதவும்" என்றார்.
-
அடித்து தூக்கும் Gen Z படை.. நேபாள அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை! -
சாதிக்குமா Gen Z இளைஞர் படை? நேபாளத்தில் இன்று நடைபெறும் பொது தேர்தல்.. விறுவிறு ஏற்பாடுகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ












Click it and Unblock the Notifications