ஸ்வீடன் குரான் எரிப்பால் பதற்றம்! ஐநாவில் பாகிஸ்தானை ஆதரித்த இந்தியா! நிறைவேறிய தீர்மானம்.. செம
வாஷிங்டன்: ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிராக ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம் குரான் எரிப்புக்கு எதிரான தீர்மானம் ஐநாவின் மனி உரிமைகள் அமைப்பின் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக ஸ்வீடன் உள்ளது. இந்நிலையில் தான் ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறிவருகிறார். மேலும் அவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்.

இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடந்த மாதம் ஸ்டாக்ஹோம் மசூதி முன்பு குரான் எரிப்பு போராட்டம் நடந்தது. இத்தகைய போராட்டத்தை அனுமதித்த ஸ்வீடன் அரசுக்கு துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்பட ஏராளமான இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய செயல்பாடும் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த நாடுகள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்நிலையில் தான் ஸ்வீடன் குரான் எரிப்பு போராட்டத்துக்கு எதிராக ஐநாவில் உள்ள மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாடுகள் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மதவெறுப்புக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை ஒவ்வொரு நாட்டு அரசும் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மதசுதந்திரம், கருத்து சுதந்திரம் நசுக்கப்படும். தற்போது குரான் எரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மேற்கத்திய நாடுகள் மதசுதந்திரத்தை பாதுகாக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அதோடு இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த தீர்மானத்துக்கு இந்தியா, சீனா உள்பட 28 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 12 பேர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 7 நாடுகளின் பிரதிநிதிகள் விலகி இருந்தன. ஐநா மனித உரிமைகள் பாதுகாப்பு சபையில் அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதனை தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளின் பிரதிநிதிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் தூதர் கலீல் ஹஷ்மி கூறுகையில், ‛‛இந்த தீர்மானம் என்பது சுதந்திரத்தை வலியுறுத்துவதாகும். மாறாக பேச்சுரிமையை கட்டுப்படுத்துவது என்பதை நோக்கமாக கொண்டது அல்ல. மேலும் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தை இந்த தீர்மானம் கொண்டுள்ளது. இந்த தீர்மானம் தற்போது நிறைவேறியது மூலம் குரான் உள்பட மதம்சார்ந்த நூல்களை யாரும் இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications