இன்னும் சில நாட்கள்தான்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்!
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.14 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகளவில் இதுவரை 71,403,720 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கையோ 16 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 49,588,630 ஆகும். மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 106,566 ஆகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.62 கோடியை தாண்டியுள்ளது. அதாவது 16,282,794 பேர் ஆகும். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 302,696 ஆகும். இங்கு புதிதாக 233,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் 98 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை 1.42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த ஒரே நாளில் 29,039 பேர் பாதிக்கப்பட்டனர்.
பிரேசிலில் 68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 52,770 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உலகளவில் புதிதாக நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் 2,597,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு புதிதாக 28,585 பேர் புதிதாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் 23 லட்சம் பேரும், பிரிட்டரின் 18 லட்சம் பேரும், இத்தாலியில் 18 லட்சம் பேரும், துருக்கியில் 17 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications