கோடிங் நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவது எப்படி! கூகுள் ஊழியர் பகிர்ந்த சீக்ரெட்! ஆஹா நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: பொதுவாக நம்மில் பலருக்கும் நேர்காணல் என வந்துவிட்டாலே உதற ஆரம்வித்துவிடும். சும்மா இருக்கும் போது அனைத்துக்கும் டக்கு டக்குனு பதில் சொல்பவர்கள் கூட நேர்காணலில் திணறுவதை நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் நேர்காணலை எப்படி ஈஸியாக எதிர்கொள்வது என்பது குறித்த டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். அது இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்தியர்கள் பலரும் பல உயர் பதவிகளில் அமெரிக்காவில் வேலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்கள் பலரும் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதற்கிடையே கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் மென்பொருள் பொறியாளரான சாஹில் காபா என்பவர் நேர்காணலில் கோடிங் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெறுவது எப்படி என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கூகுள் ஊழியர்
இந்திய அமெரிக்கரான சாஹில் காபா, சியாட்டிலில் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கோடிங் தொடர்பான அவரது இந்த LinkedIn போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. நான்கு ஆண்டுகளாகக் கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காபா, நேர்காணல்களில் தான் கோடிங் தேர்வை எப்படி எதிர்கொள்வார் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார். கோடிங் நேர்காணலில் புத்தகம், பயிற்சி ஆகியவற்றை விட கேள்வி நேர்காணல் எடுப்பவரே முக்கியம் என்றும் அவரை ஹேண்டில் செய்வது முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
இதுதான் சீக்ரெட்
அவர் மேலும் தனது போஸ்டில், "கோடிங் தேர்வை நேர்காணல் செய்பவரை வைத்தே எளிதாகத் தேர்ச்சி பெற முடியும். பெரும்பாலான நபர்கள் நேர்காணல் செய்பவர்களை ஏதோ நீதிபதிகளைப் போலப் பார்ப்பார்கள்.. ஆனால் உண்மையில் என்ன தெரியுமா.. உங்கள் கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க எப்போதும் அவர்கள் தான் மிக சிறந்த சோர்ஸ்.
நேர்காணல் செய்பவர்கள் பேசும் போது மதிப்புமிக்க, நுட்பமான குறிப்புகளை வழங்குவார்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளையும் கேளுங்கள். ஆரம்பத்திலேயே அனைத்து தெளிவுபடுத்தும் கேள்விகளையும் கேளுங்கள். அதில் பதிலளிக்கும்போது அவர்கள் விடைக்கான குறிப்புகள் இருக்கும். நீங்கள் கேட்கும் கேள்விகள் அப்படி இருக்க வேண்டும்.
அமேசான் நேர்காணல்
நான் ஒருமுறை அமேசான் நேர்காணலுக்குப் போய் இருந்தேன். எனக்கு எங்கு மிகவும் சிக்கலான கேள்வியைக் கொடுத்தார்கள். ஆனால், நான் அதைப் பார்த்துப் பயப்படவில்லை.. மாறாக இரண்டு சாத்தியமான தீர்வுகளைக் குறிப்பிட்டேன். நான் சொல்லும் போது நேர்காணல் செய்வர் என்ன மாதிரி ரியாக்ட் செய்தார் என்பதைத் துல்லியமாகக் கவனித்தேன். இதன் மூலம் எது சரியான பதில் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.
எல்லாரும் மனிதர்கள் தான்
உங்களைச் செய்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தொழில்நுட்ப திறன்களை மதிப்பிடுவது மட்டுமின்றி, ஜாலியான உரையாடல்களையும் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரத்தில் நாம் பதற்றப்பட்டு ஜாலியாக பேச மாட்டோம். எப்போதும் நேர்காணலில் ஜாலியாக பேசுங்கள்.. இயல்பாக இருங்கள். ஒரு நேர்காணலில் நீங்கள் எழுதும் பெஸ்ட் கோடிங் என்பது நீங்கள் தயாரித்தது அல்ல.. மாறாக நேர்காணல் செய்பவருடன் சேர்ந்து நீங்கள் தயாரிக்கும் கோடிங் தான் சிறந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. ஒரு கட்டத்தில் கூகுள் நிறுவனமே உங்கள் டிப்ஸுக்கு நன்றி சாஹில் எனப் பதிலளித்தது. கூகுள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்தை ஆமோதித்து கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். நீங்க என்ன நினைக்கறீங்கனு கமென்டில் சொல்லுங்கள்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications