வரலாறு காணாத தாக்குதல்.. ஈரான் வலுவிழந்ததா? அமெரிக்க உளவுத்துறை கொடுத்த நெகட்டிவ் ரிப்போர்ட்
வாஷிங்டன்: ஈரான் மீது, இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு தொடர் தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இத்தனை நாள் நடத்திய தாக்குதலில் ஈரான் எந்த அளவுக்கு வலுவிழந்திருக்கிறது? என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிக்கையில், ஈரான் இன்னும் பலமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை அமெரிக்க ராணுவத்திற்கு.. குறிப்பாக டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன சொல்கிறது உளவு அறிக்கை?
கடந்த 2 வாரங்களாக, ஈரான் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்த போதிலும், ஈரானில் அரசு உறுதியாகவே இருக்கிறது. அந்நாட்டு அரசு கவிழும் நிலையில் இல்லை. இந்த குண்டு மழையில் பிப். 28ம் தேதி ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டார். இருப்பினும், அங்குள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் அரசை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக
- ஈரான் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை
- மக்கள் இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர்
- முக்கிய ராணுவ அமைப்பான IRGC இன்னும் சிதறாமல் உறுதியாக இருக்கிறது
போர் முடியுமா?
மறுபுறம் டிரம்ப் மீதான அழுத்தம் அதிகரித்திருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. அதாவது டிரம்ப் இந்த போரை தொடங்கியதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வை தூண்டி விட்டிருக்கிறார். போர் முடியும்போதுதான் விலை குறையும். எனவே போரை உடனே நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் டிரம்ப் நினைத்தாலும் இந்த போர் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது. காரணம், ஈரான் ஆட்சியாளர்கள், போர் தொடர்வதன் மூலம் டிரம்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
நம்பாத அமெரிக்கா
அதேபோல அமெரிக்காவுக்கு ஆதரவாக, குர்தீஷ் படைகள் ஆயுதங்களை டிரம்பிடம் கேட்டிருந்தன. ஆனால், டிரம்ப் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தாலும் அது தோல்வியில்தான் போய் முடியும். காரணம் குர்தீஷ் படைகளிடம் போதிய ஆள் பலம் இல்லை. போதாத குறைக்கு ஈரானை முழுமையாக வீழ்த்தாமல் போரை கைவிட தயாராக இல்லை என்று இஸ்ரேலும் அடம்பிடித்து வருகிறது.
இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தியது போதும், இனி தரைவழி தாக்குதலை தொடரலாம் என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அதிலும் வெற்றி சாத்தியமில்லை என்பதே உளவுத்துறையின் தகவலாக இருக்கிறது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications