Facebook Chat-களை இனி இஷ்டத்துக்கு ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.. ஆப்பு வைத்த மார்க் சக்கர்பெர்க்
வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை இணையத்தில் பலரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்,
சர்வதேச அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக், 190 கோடி பயனாளர்கள் கொண்டு சர்வதேச அளவில் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மட்டும் பேஸ்புக் நிறுவனத்திற்கு மொத்தம் 35 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.

மெசஞ்சர்
மெசேஜ் செய்வதற்கு மெசஞ்சர் என்ற தனியாகவும் ஒரு செயலியை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சாட் செயலிகளில், ஸ்க்ரீன்ஷாட்கள் தான் பலருக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கும். அதாவது ஒருவர் தனிப்பட்ட முறையில் அனுப்பும் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதைப் பலருக்கும் பரப்பிவிடுவார்கள். இது தனியுரிமைக்கு எதிராக உள்ளதாகப் பலரும் சாடிவரும் நிலையில், இதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆப்பு
அதன்படி தற்போது பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சரில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இனிமேல் பயனாளர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அது தொடர்பான தகவல்கள் எதிர் பயனாளர், அதாவது மெசேஜ் அனுப்புவோருக்குத் தெரியப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று பலரும் வரவேற்றுள்ளனர்.

நோட்டிபிகேஷன்
இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், "நீங்கள் அனுப்பும் தானாக அழியும் மெசேஞ்களை யாராவது ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், அது குறித்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். இதை வசதியை மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கியும் உள்ளார். தானாக அழியும் டிசப்பியரிங் மெசேஜ் வசதி என்பது பல காலமாக மெசஞ்சரில் உள்ளது. இதன் மூலம் ஒருவர் அனுப்பும் மேசேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தானாக டெலிட் ஆகிவிடும்.

விழிப்புணர்வு
இருப்பினும், இது தொடர்பாகப் பயனாளர்கள் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை என்பதால், இத்துடன் பல புதிய வசதிகளைச் சேர்த்து பயனாளர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் பேஸ்புக் இறங்கியுள்ளது. இந்த டிசப்பியரிங் மெசேஞ் வசதியை முதலில் ஸ்னாப்சாட் தளம் தான் கொண்டு வந்தது. இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற தளங்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications