Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் கிரகத்தில் கிடக்கும் மர்மமான பொருள்? ஏலியன்கள் கைவரிசையா? நாசா வெளியிட்ட புகைப்படம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்பதை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாயின் மேற்பரப்பில் வினோதமான ஒரு பொருள் கிடப்பதை நாசாவின் ரோவர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியை போலவே வேறு கிரகத்திலும் உயிர்கள் வாழ்கின்றனவா? அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சூரிய குடும்பத்தில் உள்ள 4-வதாக உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்ற ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கும் நாசாவும் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

 Mysterious doughnut-shaped rock was captured on the surface of Mars

சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விட செவ்வாய் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் நடைபெறும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மிகவும் கவனம் பெறுகிறது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் ரோவர் Perseverance இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ரோவர், செவ்வாயின் மேற்பரப்பில் 28 மைல்கள் (45 கி.மீட்டர்) தூரம் சென்று இந்த பெர்சிவரன்ஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ (Jezero Crater) பகுதியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் படங்களையும் அந்த விண்கலம் அனுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது Perseverance ரோவர் செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதேபோல், ரோவர் சேகரிக்கும் கற்கள் மற்றும் மண் போன்றவற்றை பூமிக்கு கொண்டு வந்து அதை ஆய்வு செய்து எதிர்கால செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாசாவின் மேற்பரப்பில் நடுவில் துளை கொண்ட பெரிய அளவிலான பாறை ஒன்று கிடப்பதை ரோவர் படம் பிடித்துள்ளது. ஜெசரோ கிரேட்டரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிடக்கும் இந்த பாறையை ரோவரில் உள்ள அதி நவீன கேமரா படம் பிடித்துள்ளது. ரோவர் விண்கலம் எடுத்த இந்த படத்தை SETI வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தென்பட்ட இந்த வினோத பாறையை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கற்பனைகளை பறக்க விட்டனர்.

அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஏலியன்கள் பயன்படுத்திய கழிவறையாக இருக்கலாம் என ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு கதையை அளந்து விட்டுள்ளார். அதேபோல சில நெட்டிசன்கள் சில வகையான முட்டையாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளனர். இப்படி நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எனினும், செவ்வாய் கிரகத்தில் தென்படும் இந்த பாறைகள் விண்கல்லாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+