ரெடியான நாசா.. மீண்டும் நிலவில் மனிதன்! 53 ஆண்டு கழித்து நடக்கும் அதிசயம் - இன்று பாயும் ராக்கெட்
வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 ஒன்ற ராக்கெட்டை நாசா இன்று நிலவுக்கு அனுப்புகிறது.
கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போலோ விண்கலம் மூலமாக மனிதர்களை நாசா நிலவுக்கு அனுப்பி சாதித்தது. அதன் பின்னர் நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை. செயற்கைகோள் உதவியுடன் நிலவு குறித்த தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், 53 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டு நாசா செயல்படுத்த உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பி அங்கேயே தங்க வைத்து நீண்டகால சோதனையை மேற்கொள்ள உள்ளது.

முதல் முயற்சி
இதற்கான திட்டத்தை நாசா செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை மாலை 6:03 மணியளவில் இந்த செயற்கைகோளை ஏவ திட்டமிட்டப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு எஞ்சின் செயலிழந்ததால் அந்த முயற்சி தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்று ஏவப்படும் ராக்கெட்
இந்த நிலையில் எஞ்சினில் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து இன்று நாசா வெளியிட்ட அறிக்கையில், இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்
இந்திய நேரப்படி இந்த ராக்கெட் 11.47 மணியளவில் இந்த ராக்கெட் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பான எஸ்.எல்.எஸ். ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் இதர அமைப்புகளை ஒருங்கிணைந்த முதல் ராக்கெட்டாக இது உள்ளது.

மனித பொம்மைகள்
ஓரியன் விண்கலத்தில் அதிர்வுகளை உணரும் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் நிலவுக்கு செல்வதற்கான சூழல் இருப்பதை சோதனைக்காக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.

நிலவிலிருந்து 60 மைல்
இதன் மூலம் விண்வெளி கதிர்வீச்சுகளை மனித உடல்கள் உணர்வது குறித்து சோதிக்கப்படும். இந்த ஆர்டெர்மிஸ் 1 ராக்கெட் 42 நாட்களில் 1.3 மில்லியன் மைகள் பயணிக்கும். இந்த ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும் ஓரியன் விண்கலம் நிலவின் மேற்பரப்புக்கு அருகே 60 மைல்கள் தொலைவில் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications