நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: கடந்த சில காலமாகவே நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர். இந்திய நேரப்படி நாளை காலை 4 மணியளவில் நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம் தொடங்கவுள்ளது. சர்வதேச அளவில் கவனிக்கக் கூடிய மிக முக்கியமான விண்வெளி ஆய்வு திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
நமது பூமிக்கு இப்போது ஒரே துணைக்கோளாக நிலா தான் இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நிலா குறித்து ஆய்வுகளைச் செய்தன. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல சாட்டிலைட்களையும் அனுப்பின. ஆனால், அதன் பிறகு இரு நாடுகளுமே நிலவு குறித்த ஆய்வுகளை இரு நாடுகளுமே விட்டுவிட்டன.

மீண்டும் நிலவு குறித்த ஆய்வு
இந்தச் சூழலில் தான் சமீப காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை எடுத்தது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன.
எப்போது
அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், நாளைய தினம் நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவுக்குச் செல்லவுள்ளனர். 32 மாடிக் கட்டிடம் உயரமுள்ள ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் என்ற ராக்கெட், நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சீறிப்பாயத் தயாராக உள்ளது. இந்த ராக்கெட் இந்திய நேரப்படி நாளை காலை 3.54 மணிக்கு ஏவப்பட உள்ளது.
விண்வெளி பயணத்தில் சிறு வானிலை நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெறும் என்பதால் வானிலை மாற்றங்களையும் குழு கூர்ந்து கவனித்து வருகிறது. கடைசி நேரத்தில் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் ஏற்பட்டால் அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய ஏதுவாக 2 மணி நேர விண்டோ தரப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 3.54 மணிக்கு ராக்கெட்டை ஏவுவதே திட்டம். ஒருவேளை வானிலை சிக்கல் ஏற்பட்டால் நாளை காலை 5.54 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் ராக்கெட் ஏவப்படும்.
திட்டம் என்ன
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டிமிஸ் II குழுவின் இந்த விண்வெளிப் பயணம் தொடங்க உள்ளது. நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் இவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும். பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு, ஓரியன் விண்கலம் அவர்களைச் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். அங்குத் தேவையான ஆய்வுகளைச் செய்த பிறகு அந்த டீம் மீண்டும் பூமிக்குத் திரும்பும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கும்.
அனைத்து சிஸ்டமும் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த, முதல் 24 மணி நேரம் குழுவினர் பூமிக்கு அருகிலேயே இருப்பார்கள். அதன் பிறகே அவர்கள் நிலவை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பார்கள்.
பன்முகத்தன்மை
1968 முதல் 1972 வரை அப்போலோ திட்டத்தில் பல முறை அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அந்த சமயம் ஆண்களை மட்டுமே நிலவுக்கு அனுப்பிய நிலையில், ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் குழுவில் ஒரு பெண் இடம்பெற்றுள்ளார். அதேபோல அமெரிக்கர் அல்லாத ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
-
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications