இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம்.. நிலவு விலகிச் செல்வதால் பூமியில் ஏற்படப் போகும் பகீர் மாற்றம்
வாஷிங்டன்: நமது பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகப் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பூமியின் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோளான நிலவு விலகிச் செல்வது என்பது பூமியில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது பூமிக்கு இருக்கும் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் என்றால் அது நிலவு தான்.. இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும்.. மேலும், இரண்டாவது அடர்த்தியான துணைக்கோளாகும்.

சிறுவர்களின் கதைகள், கவிஞர்களின் கவிதைகள், ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை என அனைத்திலும் நிலவுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆனால், நிலவு குறித்த சமீபத்திய ஆய்வு அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
நிலவு: அதாவது நமது பூமியின் ஒரே ஒரு இயற்கையான துணைக்கோளான நிலா இப்போது பூமியை விட்டு மெதுவாக நகர்ந்து செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படம் போலத் தோன்றலாம்.. ஆனால் இது உண்மையான ஆய்வு தான்.. நிலவா குறித்துப் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய ஆய்வில் தான் பூமியிலிருந்து சந்திரன் படிப்படியாகப் பிரிந்து செல்வது தெரிய வந்துள்ளது. மேலும், இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சந்திரன்: இந்த ஆய்வில் பூமியிலிருந்து சந்திரன் ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் வீதம் பிரிந்து செல்வது தெரிய வந்துள்ளது. இந்த வேகத்தில் சந்திரன் தனியாகப் பிரிந்து செல்வது பூமியில் பகலின் நேரத்தை அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்போது நமது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு பிரிந்து செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
25 மணி நேரம்: எது 25 மணி நேரமா.. அப்போ அதிக நேரம் ஆபீசில் இருக்க வேண்டுமா எனப் பதற வேண்டாம். இந்த மாற்றம் நடக்கப் பல கோடி ஆண்டுகள் ஆகும். ஆம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்.
அதேநேரம் இது ஏதோ இப்போது மட்டும் நடப்பது இல்லை. கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது.
என்ன காரணம்: பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும்.
இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், "நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது இதுதான்.. மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம்" என்றார்.
ஏன் இந்த ஆய்வு முக்கியம்: அதேநேரம் சந்திரன் பூமியில் இருந்து விலகிச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் ஆய்வு இதுவல்ல.. பல ஆண்டுகளுக்கு முன்பே இதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். இருப்பினும், விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு வரலாற்று மற்றும் புவியியல் சூழல் குறித்த விரிவான ஆய்வை செய்கிறது. நிலவு தன்னை தானே சுற்றும் வேகம் என்பது எப்போதும் ஒரே வேகத்தில் தான் இருக்கிறது. ஆனால், பூமி சுற்றும் வேகம் என்பது பல்வேறு விஷயங்களைப் பொறுத்து மாறிக் கொண்டே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
50 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. நிலவை நோக்கி மற்றொரு பயணம்! அசத்திய நாசா -
50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் பயணம்.. விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’ விண்கலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications