சிங்கிள் லாட்டரியில் கோடீஸ்வரர் ஆன பல ஆயிரம் பேர்.. அடுத்து நடந்ததுதான் பெரிய ட்விஸ்ட்!
வாஷிங்டன்: நார்வே நாட்டில் லாட்டரி வாங்கிய பல ஆயிரக்கணக்கானோருக்கு கோடிகளில் பரிசு விழுந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைப்பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த அவர்களுக்கு சில நிமிடங்களில் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அப்படி என்னதான் நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. லாட்டரி என்பது ஒரு சூதாட்டம்.. பல லட்சம் டிக்கெட்டுகளில் ஒருவருக்கு மட்டுமே பரிசு அடிக்கும் என்று தெரிந்தும் பலரும் லாட்டரி விளையாடுவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் கூட கேரளா, நாகலாந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது.

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, பூடான் ஆகியவற்றிலும் லாட்டரிகள் மிகப் பிரபலம். சமீபத்தில் கூட இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகெப்பெரிய தொகையாக இலங்கை மதிப்பில் 47 கோடி ஒருவருக்கு லாட்டரியில் பரிசு அடித்து இருந்தது. லாட்டரிகளை பொறுத்தவரை ஒருநாளாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா நாமும் கோடீஸ்வர் ஆகிவிட மாட்டோமா என நினைத்துக்கொண்டு லாட்டரி பலரும் விளையாடுகிறார்கள்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
நடப்பது கனவா? நிஜமா?
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் லாட்டரி நிறுவனம் ஒன்று லாட்டரி டிக்கெட் வாங்கியவர்களில் 47 ஆயிரம் பேருக்கு பல கோடிகளை வென்றதாக பரிசு அடித்துள்ளது. யூரோ ஜாக்பாட் லாட்டரி டிக்கெட் வாங்கியவர்களுக்குதான் இப்படி இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இதனால், டிக்கெட் வாங்கிய பல ஆயிரம் பேர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். நடப்பது கனவா? நிஜமா என புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்து கொண்டு இருந்தவர்களுக்கு சில நிமிடங்களில் பெரிய ட்விஸ்ட் ஒன்று காத்திருந்துள்ளது.
அதாவது, பரிசுத்தொகையை உள்ளூர் பண மதிப்புக்கு கணக்கிடும் போது 100 ஆல் வகுப்பதற்கு பதிலாக 100 ஆல் பெருக்கிவிட்டார்களாம், லாட்டரி நிறுவன ஊழியர்கள். இதனால், பல ஆயிரம் பேருக்கும் கோடிகளில் பரிசு விழுந்ததாக மெசேஜ் போயிருக்கிறது. சிறிது நேரத்தில் தவறை கண்டறிந்த லாட்டரி நிறுவனம், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளது. இதனால், சில நிமிடங்கள் சந்தோஷமாக இருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நல்ல நேரம் வந்ததாக நினைத்தேன்
இப்படி ஏமாற்றம் அடைந்தவர்களில் ஒருவரான ஒலே பிரேட்ரிக் ஸ்வீன் என்பவர் இது பற்றி கூறுகையில், நான் கீரிஸ் நாட்டில் விடுமுறை நாளை கழிக்க போயிருந்தேன். அப்போது 1.2 மில்லியன் க்ரோனர் (1,19,000 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) பரிசு அடித்துள்ளதாக மெசேஜ் வந்தது. அப்பாடா.. ஒரு வழியாக நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது.
இது உண்மைதானா என்று லாட்டரி நிறுவனத்தின் வெப்சைட்டில் போய் பார்த்தேன். அதிலும் வாழ்த்துக்கள் என்று வந்தது. ஆனால் உண்மையில் எனக்கு சுமார் ஆயிரம் ரூபாய்தான் பரிசாக அடித்து இருந்துள்ளது. அடுத்த சில நாட்களில் என்னை போன்று 47 ஆயிரம் பேருக்கு லாட்டரி நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில், தவறுக்கு வருந்துவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது" என்றார்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications