அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறக்கும் நிலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைக்கும் ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் 39,665,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6.54 லட்சம் பேர் இறந்துள்ளனர். 30,826,478 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதில் கலிபோர்னியாவில் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு மட்டுமே 65 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1.69 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி புளோரிடா மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

அங்குள்ள 1 லட்சம் வீடுகளில் 75 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அது போல் நோயாளிகளை கவனித்துக் கொள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், லவுசியானா ஆகிய பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பொதுவாக 90 சதவீதம் மட்டுமே சிலிண்டரில் ஆக்ஸிஜன் நிரப்பப்படும். 30 முதல் 40 சதவீதம் இருக்கும் போது அது மீண்டும் நிரப்புவது வழக்கம்.
தற்போது 10 முதல் 20 சதவீதம் வரையே ஆக்ஸிஜன் உள்ளது. இது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியே மீண்டும் நிரப்பப்பட்டாலும் 50 சதவீதம் மட்டுமே நிரப்புவர். இது மிகவும் மோசமான நிலையாகும் என்றனர். அது போல் அமெரிக்க மருத்துவமனைகளில் இறப்போரை வைத்திருக்க பிணவறைகளிலும் இடம் இல்லை.

டெல்டா வேரியன்ட் வகை வைரஸ் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இது வேகமாக நோயாளியின் நுரையீரலை தாக்குகிறது. இதனால் அவர்களது நிலைமை மோசமாகிறது. இது போல் நிறைய பேர் பாதிக்கப்படுபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள். 30, 40, 50 வயதினர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள தெற்கு கரோலினா, லவுசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் 50 சதவீத மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 52.1 சதவீதம் மக்களே முழுமையாக இரு டோஸ்கள் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.
Recommended Video
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications