வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'படுபாதகம்' 9 சிறுமிகள்.. மகள் உள்பட 20 பேரை மனைவியாக்கிய கொடூரம்.. இதுல இவரு மத போதகர் வேற

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது சொந்த மகள் உள்பட 20 பெண்களை மத போதகர் திருமணம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

வெளிநாடுகளில் சில வினோத சம்பவங்கள் நடப்பது போல, நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சிகர சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சைக்கோக்கள் போல நடந்து கொள்ளும் சில கொடூர நபர்கள் தொடர் கொலைகளில் ஈடுபடுவது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது என மனித சமூகத்தையே வெட்கப்பட வைக்கும் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நாட்டை உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை.. கோவையிலும் மதமாற்ற காதலா? மத வெறி வதந்தி என எச்சரித்த போலீஸ் நாட்டை உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை.. கோவையிலும் மதமாற்ற காதலா? மத வெறி வதந்தி என எச்சரித்த போலீஸ்

 திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள்

திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள்

இதுபோன்ற ஒரு மிருகத்தனமான ஒரு செயல்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- அமெரிக்காவை சேர்ந்த மத போதகர் சாமுவேல் ரப்பலே பேட்மேன். 46-வயதான ரப்பலே பேட்மேன் தன்னைத்தானே இறைதூதர் என்று அறிவித்துக்கொண்டு ஒரு குழுவின் மதபோதகராகவும் உள்ளார். சாமுவேல் ரப்பலே பேட்மேன் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சொந்த மகள் உள்பட 20 மனைவிகள்

சொந்த மகள் உள்பட 20 மனைவிகள்

அதாவது 20 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தனது சொந்த மகளும் அடங்கும். இது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அரிசோனா மாகாண போலீசார், மதபோதகர் என்று தன்னை அறிவித்துக்கொண்ட சாமுவேல் ரப்பலே பேட்மேனை கைது செய்தனர். இதுமட்டும் இன்றி தனது குழுவில் உள்ள உறுப்பினர்களிடம், தங்கள் மைனர் மகள்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுத்ததாக சாமுவேல் ரப்பேல் பேட்மேன் மீது குற்றச்சாட்டு எழுந்தது இருக்கிறது.

சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள்

சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள்

கடவுளுக்காக தங்கள் கண்ணியத்தை விட்டுக் கொடுத்தாலும் உங்கள் உடலில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து விடுவார் என்றும் கன்னித்தன்மை பாதிக்கப்படாது என்ற ரீதியிலும் சமுவேல் இந்த சிறுமிகளிடம் கூறி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொலராடாவில் உள்ள பேட்மேன் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து சில பொருட்களையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.

8 சிறுமிகள் வெளியே வந்ததால்...

8 சிறுமிகள் வெளியே வந்ததால்...

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பேட்மேன் அரிசோனா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பேட்மேன் குழுவில் இருந்து 8 சிறுமிகள் தப்பி வெளியே வந்ததன் மூலம் இந்த படுபாதக செயல் நடைபெற்று வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனாலும் சிறுமிகள் யாரும் தங்களுக்கு பேட்மேன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

நடந்த எதையும் தெரிவிக்கக் கூடாது..

நடந்த எதையும் தெரிவிக்கக் கூடாது..

எனினும், பேட்மேன் அவர்களுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விசாரணை அதிகாரிகளும் தங்களுக்கு நடந்த எதையும் தெரிவிக்கக் கூடாது என்று பேட்மேனின் மனைவிகள் இந்த சிறுமிகளை அறிவுறுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
A shocking incident has taken place in America where a religious preacher married 20 women including his own daughter. The worst thing is that 9 of them are girls under the age of 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X