"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் ஒரு முக்கிய இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே 100 நாட்களைத் தாண்டி நீடித்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. முதலில் முதற்கட்ட அமைதி உடன்படிக்கையை இரு தரப்பும் கையெழுத்திட உள்ளன. அதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களில் மற்ற விஷயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்
இதற்கிடையே பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் அங்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசியுடன் இணைந்து டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானுடனான இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
குண்டு வீசுவோம்
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இந்த ஒப்பந்தத்தில் உள்ள பாயிண்டுகள் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஈரான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவோம். அவர்களின் மீது நேராகக் குண்டுகளை வீசுவோம்" என்று மிகவும் கடுமையான தொனியில் எச்சரித்தார்.
எல்லாமே மாறிடுச்சு
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அதே வேளையில், தற்போது தயார் செய்யப்பட்டுள்ள அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த ஒப்பந்தம் மிகவும் வலிமையானது என்றும் டிரம்ப் பாராட்டினார். அவர் மேலும், "சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்.. இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அது மிகவும் உறுதியானது" என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, ஒப்பந்தத்தின் நுணுக்கமான தகவல்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும், அது அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் நம்புகிறார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே, உலக சந்தையில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த ஒப்பந்த அறிவிப்பால் உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் பெரியளவில் எழுச்சியைக் கண்டுள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் நம்பிக்கை
போர் பதற்றம் தணிவதால், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இது உலக நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முழுமையாகத் திறக்கப்படும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார். இதன் மூலம் சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடைபெறும்.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், "பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டிருப்பதும், எண்ணெய் விலை குறைந்திருப்பதும் வெறும் வார்த்தைகளை விட உரக்கப் பேசுகின்றன" என்றார். அதாவது, இந்த ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சந்தையின் மாற்றங்களே நிரூபிப்பதாக அவர் கருதுகிறார்.
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?












Click it and Unblock the Notifications