உக்ரைன் தாக்குதல்.. சும்மா விடமாட்டேன்னு புதின் சொல்லியிருக்கார்! தொலைபேசியில் பேசிய டிரம்ப் பகீர்
வாஷிங்டன்: ரஷ்யாவின் விமான தளங்கள் மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்திய நிலையில், புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது,உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் திட்டவட்டமாக கூறியதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்து வருகிறது. இதில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

ரஷ்யா மீது அடுத்தடுத்து தாக்குதல்
இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் இரு நாடுகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த நாட்டின் மீது உக்ரைன் மிகப் பெரிய அளவில் டிரோன் தாக்குதலை அண்மையில் நடத்தியது. இதில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. நீருக்கடியில் பாலத்தின் துாண்களின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை இயக்கி, உக்ரைனின் உளவு அமைப்பான, எஸ்.பி.யு. தாக்குதல் நடத்தியது. 1,100 கிலோ கிராம் வெடி பொருட்களை பயன்படுத்தி சாலை மற்றும் ரயில் பாலத்தை குறி வைத்து தாக்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் அடுத்தடுத்த இந்த தாக்குதல்கள் ரஷ்யாவை அதிர வைத்துள்ளது.
சும்மா விட மாட்டோம் என பேசினார்
இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் விவாதித்துள்ளனர். மே 19ஆம் தேதிக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதினுக்கு இடையே நடந்த இரண்டாவது உரையாடல் ஆகும்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். இதன்பிறகு இந்த உரையாடல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது:- "புதினுடனான உரையாடல் சிறப்பானதாக இருந்தது. ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தையாக இது இல்லை" என்று குறிப்பிட்டார்.
ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை
மேலும், விமான தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யா மிக வலுவான பதிலடியை கொடுக்கும் என்று புதின் தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறினார். அதில், "விளாடிமிர் புதினுடன் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பேசினேன். ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்தும், இரு தரப்பினரும் நடத்தி வரும் பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஈரான் உடனான அணு ஆயுதப் பேச்சுவார்த்தை குறித்தும் விவாதித்ததாகத் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் விளாடிமிர் புதின் பங்கேற்க விரும்புவதாகவும், இதன் மூலம் விரைவான தீர்வுக்கு உதவ முடியும் என்றும் டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications