அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்... 1.4 கோடி பேர் வாக்குப்பதிவு!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரைக்கும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்குகளை செலுத்தி இருக்கின்றனர். 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட விறு விறுப்பாக இந்த முறை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக முன்னதாகவே வாக்குச் சாவடிக்கு வந்திருந்து வாக்குகள் செலுத்தலாம் என்றும், தபாலில் வாக்குகள் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர் அதிகளவில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர் என்று அமெரிக்க தேர்தல் திட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் துவங்குவதற்கு முன்பு தபால் வாக்குகள் குறித்து ட்ரம்ப் சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த முறையிலான தேர்தலில் மோசடி நடக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். வரும் நவம்பர் 3ஆம் தேதிதான் அதிகாரபூர்வமாக தேர்தல் நடைபெறுகிறது.
புளோரிடா பல்கலைக் கழகத்தின் தேர்தல் தகவல் மையம் அளித்திருக்கும் புள்ளி விவரத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு வரை அந்த நாட்டில் 10.4 லட்சம் பேர் அதாவது ஒரு கோடியே நான்கு லட்சம் பேர் வாக்களித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தப் புள்ளி விவரத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், அப்போது 14 லட்சம் பேர்தான் வாக்களித்து இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
மின்னசோட்டா, தெற்கு தகோதா, வெர்மாண்ட், வெர்ஜீனியா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் வாக்குகள் அதிகமாக இதுவரை பதிவாகி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களுக்கும் இடையே விறு விறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications