இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி.. கவனித்த எம்.பிக்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி எனவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது எனவும் இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், அமெரிக்கா - இந்தியா நட்பு இடையேயான உறவு அப்படியே உள்ளது. அமெரிக்கா - இந்தியாவுக்கான காலத்தில் அதிக முன்னேற்றங்களை பார்த்து இருக்கிறோம்.

Terrorism is an enemy of humanity: PM Modi tells US Congress

துடிப்பு மிக்க ஜனநாயகத்தை கொண்ட நாட்டின் குடிமகனாக நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். சபாநாயகரே உங்களுக்கு மிகவும் கடினமான பணி உள்ளது. ஆலோசனைகள் மற்றும் சித்தாந்தங்களின் விவாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு வலுவான இருதரப்பு ஒருமித்த கருத்து தேவைப்படும் போது உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் முதலில் பிரதமராக அமெரிக்கா வந்த போது, இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக விளங்கியது. ஆனால், இன்று இந்தியா 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. விரைவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்தியா வளரும் போது மொத்த உலகமும் வளரும்.

Terrorism is an enemy of humanity: PM Modi tells US Congress

உக்ரைன் மோதலால் ஐரோப்பாவில் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் கடும் வேதனையை இந்த போர் கொடுக்கிறது. வல்லமை பொருந்திய நாடு இதில் ஈடுபடுவதால் விளைவுகளும் கடுமையாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது போல இது போருக்கான தருணம் இல்லை. இது பேச்சுவார்த்தை ராஜ்யரீதியிலான உறவுக்கான காலம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+