கட்டக் கடைசியாக.. சன்னி லியோன் பலான படம் பார்த்து விட்டு செத்துப் போன பின் லேடன்!
வாஷிங்டன்: இன்றைய நாளை யாரும் மறந்து இருக்க முடியாது. உலகின் வல்லரசு நாட்டையே சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் உலுக்கிய நாள்.
நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரத்தை விமானம் மோதி தகர்த்த நாள். இதில் 3000த்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

விமானம் கடத்தல்
அமெரிக்காவுக்கு சொந்தமான 4 விமானங்களை கடத்திய அல்குவைதா பயங்கரவாதிகள் 2001, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது மோதச் செய்து வெடித்தனர். விமானத்தில் வெடிகுண்டுகளை நிரப்பிச் சென்று இருந்தனர். 2 விமானங்களில் 147 பயணிகளும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.

ராணுவ வீரர்கள் பலி
மூன்றாவது விமானத்தை ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணிகள் , பயங்கரவாதிகள் இடையே சண்டை ஏற்பட்டது. இறுதியில் விமானம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர். இந்த வடுக்கள் இன்னும் அமெரிக்கர்களின் நெஞ்சில் மட்டுமில்லை. உலக மக்களின் மனங்களில் இருந்தும் நீங்கவில்லை.

சீல் படை
இதற்கு ஒட்டு மொத்தமாக அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா 2011ல் பழி வாங்கினார். பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் வீட்டுக்குள் இருந்தவாறு டிவி பார்த்துக் கொண்டு இருத்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தனது நாட்டின் சீல் படையினர் மூலம் 2011 மே 2ஆம் தேதி சுட்டுக் கொன்றார். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் தனது குழுவினருடன் ஒசாமா பார்த்துக் கொண்டு இருந்த புகைப்படங்கள் பின்னர் வெளியாயின.

கடலில் வீச்சு
ஹாலிவுட் படங்களே தோற்கும் அளவிற்கும் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இருந்தன. சுட்டுக் கொன்ற பின்னர் பிணத்தை கடலில் வீசி எறிய ஒபாமா உத்தரவு பிறப்பித்தார்.

சன்னி லியோன்
இதற்குப் பின்னர் ஒசாமா வைத்திருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இவற்றை வெளியிட அப்போது அமெரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. ஒசாமா அதிகமாக ஆபாச வீடியோக்களைப் பார்பார் என்று கூறப்பட்டு வந்தது. குறிப்பாக சன்னி லியோனியின் வீடியோக்களை பார்ப்பார் என்று கூறப்பட்டது. சுட்டுக் கொல்லும்போது அந்த வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார் என்று ஒரு செய்தி கூறுகிறது. இல்லை அவர் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் என்று மற்றொரு செய்தி கூறுகிறது.

குறும்படம்
ஆனால், ஒசாமா ஆபாச வீடியோவைப் பார்ப்பது போல் அதில் ரகசிய குறியீடுகளை குறித்து வைத்து, அதன் மூலம் தனது கூட்டாளிகளுடன் பேசி வந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கும் குறும்பட தொடர்கள் மூலம் வெளியாகியுள்ளது. நேஷனல் ஹியோகிராபிக் சேனல் இந்த தொடரை ஒளிபரப்பியுள்ளது.
இந்த தகவலை ஒசாமாவை முதன் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேட்டி எடுத்து இருந்த சிஎன்என் தேசிய பாதுகாப்பு விமர்சகர் பீட்டர் பெர்சன் உறுதிபடுத்தியுள்ளார். இவர்தான் இந்த குறும்படத்தை தொகுத்து வழங்கியுள்ளார்.

கொரியர்
இமெயில்கள் வாயிலாக செய்திகளை எப்போதும் தனது கூட்டாளிகளுடன் ஒசாமா பகிர்ந்து கொண்டதில்லை என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் இந்த மெயில்களை யாரும் ஊடுருவி பார்க்கக் கூடும் என்ற அச்சம். இதனால் சில நேரங்களில் கொரியர் சேவையையும் பயன்படுத்தி வந்துள்ளார். கொலை செய்யும் தகவல்களை தனது ஆபாச வீடியோக்களில் ஒசாமா கோட் வார்த்தைகளாக சேமித்து வைத்து இருந்ததாக இந்த குறும்படத்தில் பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ரகசியம்
இந்த செய்தி இவ்வாறாக இருக்க, ஒசாமாவை சுட்டுக் கொல்லும்போது அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் எங்கும் இன்டர்நெட் சேவை வசதி கிடையாது. ஆனால், பல இடங்களில் டிவி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இவரது வீட்டுக்குள் இருந்து 4,70,000 டிஜிட்டல் பைல்கள், 250கிகா பை டேட்டா, 100க்கும் அதிகமான யுஎஸ்பி டிரைவ், டிவிடி மற்றும் சிடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 கம்ப்யூட்டர்கள், பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ரகசியம் என அனைத்தும் சிக்கின. இன்று வரை அமெரிக்கா எந்த ரகசியத்தையும் வெளியிடவில்லை. அன்றுமுதல் அல்கொய்தாவின் கொட்டமும் அடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications