Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5ம் வகுப்பு மாணவருடன் உடலுறவு! பள்ளியிலேயே மாணவரிடம் அத்துமீறிய ஆசிரியை.. பதற வைக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை ஒருவர் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவருடன் தகாத உறவைக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

ஆசிரியர்கள் தான் எப்போதும் மாணவர்கள் செய்யும் தவறை கண்டித்து அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். ஆனால், இங்கு ஆசிரியை ஒருவரே மாணவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Threee months before wedding US teacher arrested for making out with 5th-grader

அத்துமீறிய ஆசிரியை: அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை மேடிசன் பெர்க்மேன்.. இவர் வேலை செய்து வந்த பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு மாணவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த ஆசிரியைக்குத் திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த 11 வயது சிறுவனும் மேடிசனும் தொலைப்பேசியில் ஆபாசமாகப் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் தாயார் மொபைலை பிடுங்கிப் பார்த்ததில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அந்த சிறுவனுக்கும் ஆசிரியைக்கும் நடந்த மெசேஜ் உரையாடல்களைப் பார்த்ததும் அந்த சிறுவனின் பெற்றோருக்குத் தலையே சுற்றிவிட்டதாம். இருவருக்கும் இடையே அந்தளவுக்கு ஆபாச மெசேஜ்கள் இருந்துள்ளது.

"கணவர் வேண்டாம்.. மாமியார் தான் வேண்டும்.. அவங்க கூட தான் வாழ்வேன்.." அடம்பிடிக்கும் இந்திய இளம்பெண்


புகார்: இதையடுத்து அவற்றை எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று இது குறித்துக் கேட்டுள்ளனர். மேலும், போலீஸ் நிலையத்திலும் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மதிய உணவின் போது அல்லது பள்ளி முடிந்த பிறகு அந்த 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்தது குறித்து அந்த மெசேஜ்கள் இருந்துள்ளன. மேலும், பல ஆபாச கருத்துகளை அந்த சிறுவனுக்கு இந்த ஆசிரியை அனுப்பி இருக்கிறார்.

Threee months before wedding US teacher arrested for making out with 5th-grader

என்ன நடந்தது: இருவருக்கும் இடையே எப்படி இந்த உறவு ஏற்பட்டது.. எத்தனை காலம் இது போல அவர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர் மேலும், ஆசிரியை பெர்க்மானின் பேக்கில் நடத்திய சோதனையில், சிறுவனின் பெயருடன் ஒரு கவர் இருந்துள்ளது. அதில் அந்த சிறுவன் எழுதிய பல லெட்டர்கள் இருந்துள்ளது. ஆசிரியை பெர்க்மானும் தானும் இதுபோல பல கடிதங்களை மாற்றிக் கொள்வோம் என்று அந்த சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தார்.

மேலும், இருவருக்கும் இடையே ஸ்பெஷலான உறவு இருப்பதாக எல்லாம் அந்த ஆசிரியை பெர்க்மானிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் 24 வயதான பெர்க்மேனுக்கு ஏற்கனவே திருமணத்திற்கு நிச்சயம் நடந்துள்ளது. அதிலும் எப்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததோ கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் அவருக்கு இந்த சிறுவன் உடனும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

3 மாதத்தில் திருமணம்: அந்த ஆசிரியைக்கு 3 மாதங்களில் அதாவது ஜூலை மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து $25,000 (சுமார் ரூ. 21 லட்சம்) பத்திரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளில் நுழையவே பெர்க்மேனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+