நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு... டிரம்ப், மைக் பென்ஸ் முதன்முறை சந்திப்பு.. என்ன திட்டம்?
வாஷிங்டன்: நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் நேற்று மாலை ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.
இவர்கள் இருவரும் நாடளுமன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதித்தார்களா? என்பது தெரியவில்லை என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை அந்த நாட்டு நாடாளுமன்றம் சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறைக்கு பிறகு டிரம்பின் முக்கிய ஆதரவாளராக கருதப்பட்ட துணை அதிபர் மைக் பென்ஸுக்கும், டிரம்பிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
ஜோ பைடனின் வெற்றியைத் மைக் பென்ஸ் அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்தபோது,. தான் அமெரிக்க அரசியலமைப்பின்படி செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.இந்த நிலையில் நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் நேற்று மாலை ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். நாடளுமன்ற வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடளுமன்ற வன்முறைக்கு பிறகு டிரம்பும், இந்த ஜோடி ஒரு "நல்ல உரையாடல் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதித்தார்களா என்பது தெரியவில்லை என்று கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications