அமெரிக்க அதிபர் தேர்தல்.. விடமாட்டார் ட்ரம்ப்.. விசித்திர வழக்குகளை சந்திக்கப் போகிறது நீதிமன்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில், இழுபறி நீடித்து வரும் நிலையில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்திக்க போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரம், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

270 என்ற மேஜிக் நம்பர் யாருடையது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 42 மாகாணங்களில், இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்று விட்டாலே போதும் ஜோ பிடன் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான், மூன்று மாகாணங்களின் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் டிரம்ப்.
ஜோ பிடன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே டொனால்ட் டிரம்ப் இதைத்தான் கூறியிருந்தார். எனவே அவர் ஒரு முடிவோடு இருப்பது தெளிவாக தெரிகிறது.
டிரம்ப்பின் பிரச்சார குழு, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவில் வழக்குகள் தொடர்வதாக அறிவித்துள்ளது மற்றும் விஸ்கான்சினில் மறு எண்ணிக்கை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜனநாயக கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெற்றி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே அமெரிக்க நீதிமன்றம் இதுவரை சந்தித்திராத விசித்திரமான பல வழக்குகளை சந்திக்க தான் போகிறது. இந்த வழக்கின் தன்மை மக்களின் குற்றமா அல்லது தேர்தல் நடைமுறையில் உள்ள குளறுபடிகளின் குற்றமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications