ட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்!!
வாஷிங்டன்: எப்படி அதிபர் பதவியில் இருந்து கொண்டு ஒழுங்கற்ற, தவறான ஆட்சியை நடத்தினாரோ அதேபோல்தான் தற்போது கொரோனா நோயையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையாண்டு இருக்கிறார் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இருவரும் போட்டியிடுகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் மீண்டும் ட்ரம்ப் பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்.

பிளவு
ஃபுளோரிடாவில் நேற்று பிரச்சாரம் செய்த ஜோ, ''ட்ரம்ப்பின் தலைமை அமெரிக்காவில் பிளவுபடுத்தும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருந்தது. இதற்காக அமெரிக்கர்கள் அதிக விலையை கொடுக்க வேண்டியது இருந்தது. மக்களுடன் ட்ரம்ப் விளையாடி விட்டார், ஆனால், அதேசமயம் அவர் மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டார்.

சலுகை
இவரது தவறான ஆட்சியால் புளோரிடாவில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருக்கும் முதியவர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை பெற முடியாமல் போனது. நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. இதையேதான் மக்களும் குறிப்பிடுகின்றனர்.

விலை உயர்வு
கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் பொழுதை கழித்து வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்தபோது என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மருந்து நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர் கணக்கில் வரி விலக்கு அளித்தார். ஆனால், அவர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள், உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தினார்கள். தற்போது கொடிய தொற்று நோய் மக்களை ஆட்கொண்டு இருக்கும்போதும், மருந்துகளின் விலையை அவர்கள் குறைக்கவில்லை.

இன்சூரன்ஸ்
இதை இப்போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் ட்ரம்ப். இதற்குக் காரணம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் அனைத்தும் அவரது கையில் உள்ளது'' என்றார்.

ஜோ முன்னணி
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை இந்த மாநிலம் ட்ரம்ப்புக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பைவிட பைடன் 3.7% வாக்குகள் அதிகமாக பெற்று இருந்தார்.

ட்ரம்ப்
இங்கு ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தபோது மாஸ்க் அணியாமல் கலந்து கொண்டார். இது விவாதத்துக்கு உள்ளானது. சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications