சீனாவின் பிஎப்7யை விட வேகம்.. அமெரிக்காவை முடக்கும் XBB.1.5 வைரஸ்.. இந்தியா தப்புமா? பரபர எச்சரிக்கை
வாஷிங்டன்: சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆபத்தாக அமெரிக்கா உருமாறி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் தற்போது ஓமிக்ரானின் உருமாறிய XBB.1.5 வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. அங்கு பதிவாகும் மொத்த பாதிப்பில் இந்த வகை வைரஸ் தான் 40 சதவீதம் பேரை தாக்கும் நிலையில் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இந்நிலையில் தான் XBB.1.5 வகை வைரஸ் என்பது என்ன? இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை முடக்கியது. அடிக்கடி கொரோனா வைரஸ் உருமாறி தாக்க தொடங்கியது.
இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இருப்பினும் ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது.

சீனாவில் பிஎப் 7 வைரஸ்
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில் பல ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். சீனாவில் தற்போது ஓமிக்ரான் உருமாறிய ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, கனடா, மெராக்கோ உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவில் XBB.1.5 வைரஸ்
இது ஒருபுறம் இருக்க தற்போது அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அனைவரையும் அச்த்தில் உறைய வைத்துள்ளது. ஏனென்றால் தற்போது அமெரிக்காவில் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 40 சதவீதம் பேர் இந்த வகை வைரஸால் தான் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக நியூயார்க்கில் இந்த வைரஸ் என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் நுழைந்த வைரஸ்
இந்த XBB.1.5 வைரஸ் தற்போது அமெரிக்காவின் 10 மாகாணங்களில் பரவி உள்ளது. இந்த வகை வைரஸின் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. டிசம்பர் 24ல் இந்த வைரஸ் பாதிப்பு என்பது அமெரிக்காவில் 21.7 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் 31ல் 44.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை விட அமெரிக்காவில் பரவும் XBB.1.5 வைரஸ் சார்ந்த ஆய்வுகள் தொடங்கி உள்ளன. இந்த வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை போல் அமெரிக்காவில் பரவும் XBB.1.5 கொரோனா வைரசும் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

ஓமிக்ரான் உருமாறிய வைரஸ்
இதற்கிடையே தான் XBB.1.5 வைரஸ் எப்படி உருவானது? இதன் வீரியம் என்ன? தடுப்பூசிக்கு அடங்குமா? என்பன உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு: அமெரிக்காவில் 40 சதவீத மக்களை தற்போது தாக்கி வரும் இந்த XBB.1.5 எனும் வைரசும் ஓமிக்ரானின் உருமாறிய வைரஸ் தான். இது ஓமிக்ரான் பிஏ.2 வகை வைரஸின் துணை மாறுபாடாகும். சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை போல் இதுவும் ஓமிக்ரான் வைரஸில் இருந்து தான் உருமாறி உள்ளது. இது முந்தைய வைரஸை விட பலமடங்கு வரை வேகமாக பரவும் தன்மையுடன உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர்.

தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?
இதனால் தான் தற்போது பெரியளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. XBB.1.5 வைரஸ் கொரோனா தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு திறனை குறைக்கும் திறன் கொண்டுள்ளதோடு, தடுப்பூசி மூலம் கிடைத்த தடுப்பாற்றலில் இருந்து இந்த வைரஸ் எளிதாக தப்பித்து விடும் தன்மையுடன் உள்ளது. மேலும் உடலில் உள்ள செல்களில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் இது ஆபத்தானதாக கருதப்படுவதாக ஆய்வாளர்கள் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகின்றனர்.

நிபுணர்கள் எச்சரிக்கை மணி
இதுபற்றி சமீபத்தில் மினசோட்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டேர்ஹோம் கூறுகையில், ‛‛உண்மையிலேயே தற்போதைய சூழலில் கொரோனா வைரஸில் மோசமான உருமாறிய வைரஸ் என்பது XBB ஆகும்'' என எச்சரிக்கை மணியடித்தார். இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் ஆண்ட்ரூ பெகோஸ் கூறுகையில், ‛‛XBB.1.5 வைரஸ் அதன் குடும்பத்திலும் இருந்து வேறுபட்டுள்ளது. இது உயிரணுக்களுடன் பிணைந்து பிறழ்வை உண்டாக்கும் தன்மையும் உள்ளது. இதனால் இந்த வைரஸ் பாதிப்பு மக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்'' என்றார்.

இந்தியாவிலும் பாதிக்குமா?
இந்த XBB வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உருமாற தொடங்கியது. இது XBB.1 மற்றும் XBB.1.5 என உருமாறியது. XBB வேரியண்ட்களை போல தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது ஆபத்தானதாக அமையம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் அவை கொரோனா தடுப்பூசியின் செயல் திறனில் இருந்து தப்பிக்க வாய்ப்பாக அமையும். தற்போதைய சூழலில் இந்தியாவில் ஒருவருக்கு மட்டுமே XBB.1.5 வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது எத்தகைய பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் கூட மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications