கேலக்ஸிக்கு வெளியே "மர்ம" சிக்னல்.. இப்படியொன்றை பார்த்ததே இல்லையே.. ஸ்டன் ஆன ஆய்வாளர்கள்! என்னாச்சு
வாஷிங்டன்: நமது கேலக்ஸிக்கு வெளியே இருந்து வந்த ஒரு வித மர்ம சிக்னல்களை அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பல மர்மங்களுக்கு விடை தரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த பிரபஞ்சம் என்பது பல நூறு கிரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. அப்படியிருக்கும் இந்த கிரகத்தில் பூமியைப் போலவே வேறு சில கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

இதன் காரணமாக கேலக்ஸியில் உள்ள மற்ற கிரகங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நாசா இந்த ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வேற்றுக்கிரக வாசிகள் குறித்த பல முக்கிய ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாசா ஆய்வாளர்கள்: இதற்கிடையே நாசா ஆய்வாளர்கள் நமது கேலக்ஸிக்கு வெளியே இருந்து வந்த எதிர்பாராத "சிக்னல்" ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.. இந்த சிக்னல் ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருக்கிறது. இது என்ன சிக்னல்.. இது எப்படித் தோன்றுகிறது.. எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வாளர்களால் இன்னும் விளக்க முடியவில்லை.
ஃபெர்மி காமா-ரே என்ற சாட்டிலைட் டெலஸ்கோப்பில் இருந்து 13 ஆண்டுகள் பெறப்பட்ட சிக்னல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த நிலையில், அதில் தான் அவர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கேலக்ஸி மண்டலத்திற்கு வெளியே உள்ள எதிர்பாராத மற்றும் இன்னும் விவரிக்கப்படாத அம்சம் என்று நாசா ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
காமா கதிர்கள்: சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளால் காமா கதிர்களைக் கண்டறிய முடியும்.. காமா கதிர்கள் என்பது ஆற்றல்மிக்க ஒளியின் பெரிய வெடிப்புகளாகும். அதை நம்மால் வெறும் கண்களாலும் கூட பார்க்க முடியும். நட்சத்திரங்கள் வெடிக்கும் போது அல்லது அணு வெடிப்பு ஏற்படும் போது தான் அவை பெரும்பாலும் உருவாகும். வேறு ஒரு ஆய்வுக்காக இதைப் பகுப்பாய்வு செய்யும் போதே ஆய்வாளர்கள் இந்த மர்ம சிக்கெனல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதை முற்றிலும் தற்செயலான கண்டுபிடிப்பு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தளவுக்கு வலிமையான சிக்னலை கண்டுபிடிப்போம் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது ஆய்வாளர்கள் வேறு ஒரு இடத்தில் காமா கதிர்கள் இருக்கும் என்று நினைத்து ஆய்வை தொடங்கிய நிலையில், சம்பந்தமே இல்லாத மற்றொரு இடத்தில் அவர்கள் காமா கதிர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரே மாதிரி இருக்கே: இந்த ஆய்வு குறித்த முடிவுகள் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் உள்ள ஆய்வாளர்களும் இதேபோல காஸ்மிக் காமா கதிர்களைக் கண்டுபிடித்து இருந்தனர். இந்த இரு கண்டுபிடிப்புகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரண்டும் கிட்டதட்ட ஒரே இடத்தில் இருக்கும் நிலையில், அவை ஒரே இடத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண்வெளி துறையில் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் இது குறித்த ஆய்வுகள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவை பூமியின் தோற்றம், பிரபஞ்சம் உருவான விதம் உள்ளிட்ட பல மர்மமான கேள்விகளுக்குப் பதிலைத் தரும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசா இந்த விவகாரம் குறித்துக் கூடுதலாக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.












Click it and Unblock the Notifications