வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.. பிடிபட்ட ஆப்கானிஸ்தான் நபர் யார்? பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மனுல்லா லக்னவால் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்த நிலையில், என்ன நோக்கத்திற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே பிற்பகல் 2.30 (அமெரிக்க நேரம்) மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில், மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இருவருமே அங்கு இல்லை. உலகின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியான அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடைபெற்று இருக்கக்கூடிய இந்த துப்பாக்கிச்சூடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை உடனடியாக அமெரிக்க பாதுகாப்புப்படை சுற்றிவளைத்தது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அந்த நபரை கைவேலைப்பாடு செய்து, ஆடைகளை களைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் ஏற்றி சென்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று அமெரிக்க சட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், அவரது அடையாளத்தை முழுமையாக உறுதி செய்ய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பிடிபட்ட நபரின் பெயர் ரஹ்மனுல்லா லக்னவால் ஆகும். 29 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோ பைடன் நிர்வாகம் இருந்த போது, ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் ரஹ்மனுல்லா லக்னவால் வந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இவர் தனியாகவே நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பயங்கரவாத செயலாக இருக்க சாத்தியம் உள்ளது என்ற கோணத்தில் எஃப்பிஐ இதை விசாரித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
ஈராக்கில் நடந்ததை போல.. ஈரானிலும் நடக்கப்போகுது! தரைவழி போருக்கு ரெடியான அமெரிக்கா! -
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications