Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.. பிடிபட்ட ஆப்கானிஸ்தான் நபர் யார்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மனுல்லா லக்னவால் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்த நிலையில், என்ன நோக்கத்திற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே பிற்பகல் 2.30 (அமெரிக்க நேரம்) மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில், மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

America Trump Afghanistan

வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இருவருமே அங்கு இல்லை. உலகின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியான அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடைபெற்று இருக்கக்கூடிய இந்த துப்பாக்கிச்சூடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை உடனடியாக அமெரிக்க பாதுகாப்புப்படை சுற்றிவளைத்தது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அந்த நபரை கைவேலைப்பாடு செய்து, ஆடைகளை களைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் ஏற்றி சென்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று அமெரிக்க சட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், அவரது அடையாளத்தை முழுமையாக உறுதி செய்ய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பிடிபட்ட நபரின் பெயர் ரஹ்மனுல்லா லக்னவால் ஆகும். 29 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோ பைடன் நிர்வாகம் இருந்த போது, ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் ரஹ்மனுல்லா லக்னவால் வந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இவர் தனியாகவே நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பயங்கரவாத செயலாக இருக்க சாத்தியம் உள்ளது என்ற கோணத்தில் எஃப்பிஐ இதை விசாரித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+