ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன்.. மனம் திறந்த டிரம்ப்.. ஷாக் விளக்கம்
வாஷிங்டன்: ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது ஏன் என்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம், அந்நாட்டு அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றது. ஈரானில் அரசின் உயர்மட்ட தலைவரான அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் காசிம் சுலைமானி.
ஈரானின் ராணுவ தளபதியான இவர் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய படைகளின் வீயூகங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இவரை அமெரிக்க திட்டமிட்டு இப்போது கொன்றுள்ளது. இந்த கொலைக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.

டிரம்ப் அறிவிப்பு
அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றும் ஆனால் யாரும் சாகவில்லை என்றும் தங்கள் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதகாவும் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க தூதரகம்
இந்நிலையில் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது ஏன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம் சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

ஈரான் சதிதிட்டம்
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாளுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அதனால் தாக்குதல்
அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி திட்டம் தீட்டினார்.. இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்" இவ்வாறு கூறினார்.

சுரங்க தொழில்கள்
இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என கூறப்படுகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications