அடுத்த கொரோனா? பறவை காய்ச்சலால் முதல் உயிரிழப்பு! உறுதி செய்த WHO- மனிதர்களிடையே எப்படி பரவும்?
வாஷிங்டன்: இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாகப் பறவை காய்ச்சல் காரணமாக மனிதர்களிடையே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் முதலில் பரவிய கொரோனா பாதிப்பு அதன் பிறகு எந்தளவுக்கு ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.

உலக வல்லரசான அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு நிலைமை சீராகவே பல ஆண்டுகள் ஆனது.
அலற வைத்த கொரோனா: கொரோனா ஏற்படுத்திய பாதிப்பையும் இழப்பையும் மக்கள் இதுவரை மறக்கவில்லை. இதன் காரணமாகவே இப்போது புதுவித வைரஸ் பாதிப்பு குறித்து எதாவது தகவல் வெளியானால், அது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உலகில் முதல்முறையாகப் பறவை காய்ச்சல் மனிதர்களிடையே முதல் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
கடந்த ஏப்ரல் மாதம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் மெக்சிகோவில் உயிரிழந்துள்ளார்.. அதேநேரம் வைரஸ் பாதிப்பு எப்படி அந்த நபருக்குப் பரவியது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு: அதேநேரம் கொரோனா அளவுக்கு இது மோசமான ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் இதன் ஆபத்து குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
59 வயதான அந்த நபர் மெக்சிகோ நகரில் வசித்து வந்தார். அவருக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "இந்த பாதிப்பு அந்த நபருக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.. இருப்பினும், மெக்சிகோவில் கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் A(H5N2) பதிவாகி இருந்தது" என்றார்.
முதல்முறை: பறவை காய்ச்சல் இதுவரை பறவைகளிடையே மட்டுமே பரவி வந்தது. அது மனிதர்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்துவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவிலும் கோழிப் பண்ணைகளில் வேலை செய்து வந்த 3 பேருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட போதிலும் அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.
மெக்சிகோ சுகாதாரத் துறையும் இது தொடர்பாக ஆய்வு செய்தது. இருப்பினும், அவர்களாலும் எப்படி அந்த நபருக்குப் பறவை காய்ச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லையாம். பாதிக்கப்பட்ட அந்த நபர் கோழி உட்பட எந்தவொரு விலங்குகள் உடனும் நேரடி தொடர்பில் இல்லை. அதேநேரம் அவருக்கு ஏற்கனவே கிட்னி பாதிப்பு, நீரிழிவு நோய் எனப் பல இணை நோய்கள் இருந்துள்ளன. இதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அச்சம் ஏன்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பறவை காய்ச்சல் மனிதர்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்துவது இதுவே முதல்முறையாகும். மேலும், இப்போது வரை இது பாதிக்கப்பட்ட பறவைகளில் இருந்தே மனிதர்களை தாக்கி இருக்கிறது. ஆனால் இது மனிதர்களிடையே பரவுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை. அதேநேரம் ஒருவேளை இது மனிதர்களிடையே பரவ தொடங்கினால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications