Thaai Kizhavi OTT: நாளை ஓடிடியில் வெளியாகும் தாய்க்கிழவி.. புதுசா சஸ்பென்ஸ் இருக்காமே!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு, நாளை ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், புதிய கோணத்தில் மீண்டும் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றி ராதிகா பேசிய பேட்டியும் வைரலாகி வருகிறது.
இந்த படம் சாதாரண குடும்ப கதையாக மட்டும் இல்லாமல், தலைமுறைகளுக்கிடையேயான நம்பிக்கை, சொத்து, உறவு போன்ற விஷயங்களை நுணுக்கமாக எடுத்துரைப்பது தான் இதன் பலமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒரு பெண்மணி குடும்பத்தின் மையமாக இருந்து எவ்வாறு முக்கிய முடிவுகளை எடுக்கிறாள் என்பதே கதையின் உணர்ச்சி சார்ந்த தளமாக இருக்கிறது.

ஓடிடி வெளியீட்டை முன்னிட்டு, இந்த படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து ரசிகர்களிடையே புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. அதாவது இந்த படத்தில் கட் பண்ணிய வீடியோக்கள் ஓடிடியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம் தியேட்டரில் சில காட்சிகள் கட் பண்ணி இருந்தனர். ஆனால் அது யூடியுப்பில் வீடியோவாக வெளியானது. அதேபோல இப்படியும் சில ஸ்பெஷல் காட்சிகள் ஓடிடியில் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார் நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பேசப்படுகிறது. அவருடைய கம்பீரம் எமோஷனல் உடல் மொழி எல்லாமே பலரையும் வியக்க வைத்தது.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமான கமர்சியல் படங்களிலிருந்து விலகி, கண்டெண்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியாக இதை பலரும் பாராட்டுகின்றனர்.
மேலும், இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் இயல்பான கிராமப்புற சூழல், கதைக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது. சில காட்சிகள் நிஜ வாழ்க்கை சம்பவங்களை நினைவூட்டும் அளவுக்கு உணர்ச்சி மிக்கதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தியேட்டரில் படம் பார்த்தவர்களே கூட, "ஓடிடியில் பார்க்கும்போது இன்னும் சில விஷயங்கள் தெளிவாக புரியுமா?" என்ற ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள். குறிப்பாக சில காட்சிகள் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளதால், வீட்டில் அமைதியாக பார்க்கும் போது புதிய விஷயங்கள் கவனத்திற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மொத்தத்தில், வெற்றிகரமாக ஓடிய ஒரு படம் என்ற அடையாளத்தை தாண்டி, மீண்டும் புதிய விவாதங்களை உருவாக்கும் வகையில் தாய் கிழவி ஓடிடி வெளியீடு அமைய இருக்கிறது. நாளை வெளியாகும் இந்த படம், குடும்பம், நம்பிக்கை, ஆசை ஆகிய மூன்றின் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications