கலி முத்திப் போச்சு: கோழியை பலாத்காரம் செய்த சிறுவன்
பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
லாகூர்: பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தில் அந்த கோழி இறந்துவிட்டது.
பாகிஸ்தானின் லாகூர் அருகில் இருக்கும் 'ஜாலாப்பூர் பாட்டியான்' என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. அங்கு வசித்து வரும் 'மன்சாப் அலி' என்ற நபர் தன் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.

அதில் ஒரு கோழி நேற்று அன்சார் ஹுசைன் என்ற சிறுவன் தங்கியிருக்கும் பக்கத்து வீட்டிற்கு சென்று இருக்கிறது. அன்சார் அந்த கோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இவனின் செயலை மன்சாப் அலி மறைந்து இருந்து பார்த்துள்ளார்.
அன்சாரின் பாலியல் தொல்லையால் அந்த கோழி அதே இடத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து மன்சாப் இது குறித்து ஜாலாப்பூர் பாட்டியான் போலீசில் புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் அன்சார் போலீசிடம் ''என் மீது உள்ள குற்றச்சாட்டு உண்மைதான். என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை'' என்று வாக்குமூலம் அளித்து இருக்கிறான்.












Click it and Unblock the Notifications