வாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாட உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 22-ஆம் தேதி மதியம் 1:15 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகள், தடுப்பூசி குறித்த தங்களது முதல்கட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் திட்டத்தை சுமுகமாக மேற்கொள்வது தொடர்பாக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இதர பங்குதாரர்களுடன் பிரதமர் தொடர் ஆலோசனைகளில் ஈடுபடுவார்.
இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications