நம்பிக்கை ஒளி...
கிறிஸ்துமஸ் என்றால் சாண்டாகிளாசுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்தான்.
கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு.அது 17-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது.
17-ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்ட்டின் லூதர் காட்டில் சென்று கொணடிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது.
அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனைப்பிரார்த்தித்தவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார்.
காட்டிலிருந்த ஒரு மரத்தைப் பார்த்தபோது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதைக் கண்டார். அப்போதுவியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் பிறந்த இடத்திற்கு, சாஸ்திரிகளை அழைத்துச் சென்ற நட்சத்திரம் போலத்தான் இவையும் என உணர்ந்தார்.
தனது சர்ச் போதனைக்கு இது ஒரு சிறந்த கருத்து என மார்ட்டின் நினைத்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.
17-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸின் போது மெழுகுவர்த்திகளை முக்கோண வடிவில் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த மெழுகுவர்த்திகள் கிறிஸ்துமஸ் சீசன்முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். அதே போல் பல வீடுகளில் கிறிஸ்துமஸ் மரமும் இருக்கும்.
அவை விட்டத்தில் தலை கீழாக தொங்கவிடப்பட்டிருக்கும். இப்போது அழகுக்குப் பயன்படுத்தப்படும் சாண்டிலியர் விளக்குகள் போல இருக்கும். மரத்தின்முக்கோண அமைப்பு தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியின் வடிவில் இறைவனை குறிப்பதாக கருதப்படும்.
மரத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற மார்ட்டின், அதை தன் வீட்டின் விட்டத்தில் தொங்க விடவில்லை. மெழுகுவர்த்திகளை எடுத்து அதை பற்றவைத்து மரத்தின் கிளைகளில் வைத்தார்.
பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து மரத்தை சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர்,நட்சத்திரங்களின் ஒளி இறைவன் நான் உன்னைக் கைவிடமாட்டேன் என நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது என உடல் சிலிர்க்க தெரிவித்தார்.
இறைவனின் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.
அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது.கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல் இறைவன் நம்மை காப்பாற்ற காத்திருக்கிறார்என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications