For Daily Alerts
Just In
நம் அன்புக்காக..
புத்தாடைகள் உடுத்தி, இனிப்பு வகைகளுடன் கொண்டாடி மகிழ தீபாவளி வந்துவிட்டது. பட்டாசு வெடித்து உறவினர்களுக்குவாழ்த்து சொல்லி, குடும்பத்துடன் நாம் மகிழ்ந்திருக்கும் வேளையில்,
ஆதரிக்க யாருமற்ற சின்னஞ் சிறார்கள், குழந்தைகளால் கைவிடப்பட்ட பெரியோர்கள், மூளை இயக்க பாதிப்புக்குள்ளானகுழந்தைகள் இந்த தினத்தை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
இவர்கள் ஏங்குவதெல்லாம் நம் சிறிய அன்புக்காக மட்டுமே..
இதோ சென்னை சிவானந்தா ஆசிரமம் மற்றும் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆகிய சமூகத் தொண்டு மையங்களின் இணைய தளமுகவரிகள்.
இயன்ற உதவியைச் செய்து இங்குள்ள குட்டிக் குழந்தைகள் மற்றும் முதியோரின் முகங்களில் லட்சம் பட்டாசுகளின் வெளிச்சத்தைஉருவாக்கி மகிழலாமே!!
Story first published: Wednesday, October 9, 2002, 16:50 [IST]