For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தநிகழ்ச்சியைக் கண்டு பரவசமடைந்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 6மணியளவில் நடந்தது.

மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த பிரமாண்டமான கொப்பரையில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றப்பட்டவுடன் "அண்ணாமலைக்கு அரோகரா" என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. லட்சக்கணக்கானமக்கள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றத்தில்...

இதற்கிடையே மதுரை-திருப்பரங்குன்றத்திலும் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதுவரை இல்லாதஅளவுக்கு மிகவும் அமைதியான முறையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவுக்கு அருகே தான் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினை செய்வது வழக்கம்.

ஆனால் இந்த முறை அதுமாதிரியான கோரிக்கை எதையும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள்விடுக்கவில்லை.

வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உயர் அதிகாரிகள் பலர்இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து முருகனை தரிசித்துஅருள் பெற்றுச் சென்றனர்.

முன்னதாக காலையில் 2 காளை மாடுகள் தறிகெட்டு ஓடி, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் 30 பேர் லேசான காயம்அடைந்தனர். கோவில் தேரை இழுப்பதற்காக பக்தர்கள் கூடி நின்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X