ஆறுமுகனின் 16 திருமுகங்கள்

Subscribe to Oneindia Tamil

அல்சூர் முருகன் கோயில் மட்டுமே முருகனின் 16 திருஉருவங்களை காண முடியும்.முருகனின் திருஉருவங்கள் கோவிலின் வெளி பிரகாரத்தின் சுற்றுச்சுவற்றில்கோபுரத்தில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளின் படங்களும்விளக்கமும்:

    Sakthithara Swamy
  1. சக்திதர ஸ்வாமி

    ஒரு திருமுகமும், இரு திருக்கரங்களும், இடக் கரத்தில் வஜரமும், வலக்கரத்தில் இச்சா ஞான கிரியா சக்தி வடிவமாகிய வேலாயுதமும் ஏந்திக் கொண்டுஅசுரவதம் பொருட்டு நின்ற திருவுருவம்.


    Skandha Swamy
  2. ஸ்கந்த ஸ்வாமி

    ஒரு திருமுகமும், இரு புஜங்களும், அரையில் கோவணமும் கொண்டு, வலக்கரத்தில் தண்டை ஊன்றி, இடக்கரத்தைத் துடையில் வைத்து செம்மேனியுடன் விளங்குகின்ற திருஉருவம்.


    Devasenapathy Swamy
  3. தேவசேனாபதி ஸ்வாமி

    சூரியப்பிரகாசமும், பன்னிரு திருக்கண்களும், ஆறு திரு முகங்களும், பன்னிரு திருக்கண்களும்,புன்முறுவலும் ; வலக்கரத்தில் சக்தி, வாள், அங்குசம், பாணம், தண்டு, அபயமும்; இடக்கரத்தில் வஜ்ரம், கேடகம், பாசம், சேவல், தாமரை, வரதமும் ஆகிய இவைகளைத் தாங்கி, தேவர்களையும், மூவர்களையும் தனக்குச் சேனைகளாகக் கொண்டு நின்ற திருவுருவம்.


    Subramania Swamy
  4. சுப்ரமணிய சுவாமி

    சிவந்த நிறமும், சந்திரதகாந்திரப் பிரகாசமும், ஆர கேயூரம் முதலிய சிறந்த அணிகலங்களும். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும், அபய வரதமும். வேலும் சேவற்கொடியும் தாங்குதலுங் கொண்டு மிகவும் வரதராய் விளங்குகிற திரு உருவம்.


    Gajavahana Swamy
  5. கஜவாஹன சுவாமி

    ஒரு திருமுகமும், இரு திருக்கண்களும், நான்கு திருக்கரங்களும், வலக்கரங்களில் வேலும் அபயமும். இடக்கரங்களில் சேவற்கொடியும் வரதங் கொண்டு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவதாய் நின்ற திருவுருவம்.


    Saravanabhava Swamy
  6. சரவணபவ ஸ்வாமி

    ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக் கண்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, தேவகணங்களால் உபாசனை செய்யப்பட்டு நல்லவர்களால் பூசிக்கப்பட்டு, வலக்கரங்களில் சக்தி, பாசம், வாள், தாமரை, சேவல், அபயமும்; இடக்கரங்களில், பாசம், தண்டம், டங்கம், பாணம், வில், வரதம் இவைகளை ஏந்தி நின்ற திருவுருவம்.


    Karthikeya Swamy
  7. கார்த்திகேய சுவாமி

    ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும், பாலசூரியப் பிரகாசமும், வலக்கரங்களில் சக்தி, வாள், அபயமும்; இடக் கரங்களில் குலிசம், கேடகம், வரதமும் தாங்கி சாதுக்கள் வழிபட விளங்குகின்ற திருவுருவம்.


    Kumara Swamy
  8. குமார சுவாமி

    ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும். வலக்கரங்களில் சக்தி, வாள், இடக்கரங்களில் கொடி, கேடகம் உடையவராய் விளங்குகின்ற திருவுருவம்.


    Shanmuga Swamy
  9. சண்முக சுவாமி

    சிந்தூர காந்தி நிறமும், மயில் வாகனமும், ஆறு திருமுகங்களும், தெய்வயானை சமேதமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, வலக்கரங்களில் சக்தி, பாணம், வாள்,கொடி, தண்டு, அபயமும் ; இடக்கரங்களில் வில், வஜ்ரம், தாமரை, கேடகம், சூலம், வரதம் இவைகளைத் தாங்கி அருள் வடிவாய் நின்ற திருவுருவம்.


    Dharagari Swamy
  10. தாரகாரி சுவாமி

    பன்னிரு திருக்கரங்களிலும் இடத்தில் முறையே வரதம், அங்குசம், சேவற்கொடி, கேடகம், வில், வஜ்ரம்,. வலத்தில் அபயம், பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சக்தி இவைகளைத் தாங்கி தாரகனை வதைத்த திருவுருவம்.


    Senaaki Swamy
  11. சேநாகி சுவாமி

    ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும், வலத்தில் அபயம், வாள். சக்கரம், அங்குசம், சக்தி, சூலம் ; இடத்தில் வரதம், குலிசம், பாசம், தாமரை, தண்டம், கதை இவைகளை ஏந்திய வடிவங்கொண்டு தேவர்களைச் சைன்யமாகக் கொண்டு நின்ற திருவுருவம்.


    Brahamasasthru Swamy
  12. பிரம்மசாஸ்த்திர சுவாமி

    ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும், வலக் கரங்களில் அபயமும், உருத்திராட்ச மாலையும் ; இடக்கரங்களில் வரதமும் குண்டிகையும் உடைவராய் நான்முகக் கடவுளுக்கு உபதேசித்த திருவுருவம்.


    Valii Kalyana Sundara Swamy
  13. வள்ளிகல்யாண சுந்தர சுவாமி

    உருத்திராட்ச மாலையும், குண்டிகையும், வரதாபயமும் உடைய திருக்கரங்களுடன், வள்ளியம்மையாருடன். திருமால் நீர்கலசத்து தாரை வார்க்க ஓமம் செய்யப்பட்டவராய் எல்லா அமரர்களும் சேவிக்க விளங்குந் திருவுருவம்.


    Bala Swamy
  14. பால சுவாமி

    குழந்தை உருவமாய் மேல் தூக்கிய இரு கரங்களும் கரங்களில் தாமரைமலர் இரண்டு கொண்டு அம்மையப்பருக்கு இடையில் அமர்ந்திருக்கும் திருவுருவம்.


    Crownjabethana Swamy
  15. கிரெளஞ்சபேதன சுவாமி

    ஆறு திருமுகங்களும், எட்ட திருக்கரங்களும் அபயம், கிருபாணம், வேல், அம்பு, வரதம், குலிசம், வில், கேடகம் என்ற ஆயுதங்களை முறையே வலமும்இடமுங் கொண்டு தேவ சேனைகள் சூழ கிரெளஞ்சத்தைப் பிளந்த திரு உருவம்.


    Sikivahana Swamy
  16. சிகிவாகன சுவாமி

    பவள நிறமும், ஒரு திருமுகமும், நான்கு திருத் தோள்களும், வஜ்ரம், வேல், வரதம், அபயம் இவைகளுடனும், மயில் வாகனத்தில் ஊர்ந்த வண்ணமாய்அமரர்களுடைய இடரை நீக்கிய திருவுருவம்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+