சனியை ஏமாற்றிய விநாயகர்

Subscribe to Oneindia Tamil

அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகாத் துயரம் போம்
நல்ல குணமதிக மாமருகனை
கோபுரத்தின் மேலிருக்கும்
செல்வ கணபதியை கை தொழுதக்கால்

-விநாயகர் ஸ்லோகம்

Ganeshaநவக்கிரகங்களில் சனி போல் கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது.

மனித வாழ்வில மூன்று முறை ஏழரை நாட்டுச்சனி என்று அழைக்கப்படும் ஏழரை ஆண்டு சனி தசை வரும்.

மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் சனி தசை தேவர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களுக்கு ஏழரை நாள்.

கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. விநாயகரை பிடிக்க வந்தார் சனீஸ்வரன்.

விநாயகரை வந்து வேண்டினார் சனீஸ்வரன். விநாயகப் பெருமானே என் கடமைப்படி நான் உங்களைஏழரை நாட்கள் பிடித்திருக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களையும் நீங்கள்அனுபவிக்க வேண்டும். என் கடமைையைச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்என்றார்.

விநாயகர் மறுக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என்தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடிக்கவிருப்பதை சொல்லி விட்டு வருகிறேன்.நீங்கள் நாளை என்னை வந்து பிடித்துக் கொள்ளலாம். என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்.

சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார்.

மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். என் முதுகில் என்னஎழுதியிருக்கிறீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளைவருகிறேன் என்று முதல் நாள் தான் எழுதியதையே படித்தார்.

சனீஸ்வரரே நீங்கள் சொன்னை சொல்லை காப்பாற்றுவீர்கள் சொன்னபடியே நடந்துகொள்வீர்கள். நீங்கள் தான் இப்போது இன்று போய் நாளை வருகிறேன் என்றுகூறினீர்கள். இன்று போய் நாளை வாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தார்.

மறுநாள் வந்தார். சனீஸ்வரர். முதல் நாள் கதையே அன்றும் தொடர்ந்தது. ஏழாவதுநாள் சனீஸ்வரன் இன்று போய் நாளை வருகிறேன் என்று படிதத்தும், விநாயகர்நீங்கள் எழுதியதை நீங்களே அழித்துவிட்டு நாளை வாருங்கள் என்றார்.

சனீஸ்வரனுக்கு ஒரே சந்தோஷம். நாளை விநாயகரை பிடித்துவிடலாம் என்றுமகிழ்ந்தார். அவர் மனதில் நினைத்ததை புரிந்து கொண்ட விநாயகர். சனீஸ்வரரேநீங்கள் கூறிய 7 நாட்கள் இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நீங்கள் என்னை பிடிக்கமுடியாது என்று கூறினார்.

சனீஸ்வரன் தோல்வியுடன் .திரும்பினார். சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர்.விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+