நலம் தரும் நவராத்திரி
அலை மகள், மலை மகள், கலை மகள் மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் போது கொலு வைப்பது பன்நெடுங் காலமாக தமிழர்களால் வெகு சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது.
வீட்டில் பல மரப்படிகள் அமைத்து அவற்றில் விதவிதமான வண்ணங்களில் அழகானபொம்மைகளை வைத்து கொலு வைத்து தினமும் பூஜைகள் நடைபெறும்.
9 நாளும் நவ தானியங்களை சுண்டல் செய்து நிவேதனம் செய்வார். பாசிப்பருப்பு,கடலை பருப்பு, பச்சை பயறு, காராமணி, மொச்சைக் கொட்டை, பட்டாணி, கருப்புகொண்டை கடலை, வெள்ளை கொண்டை கடலை போன்றவற்றில் சுண்டலும்,வெள்ளை எள்ளு உருண்டையும் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
தினந்தோறும் சிறு குழந்தைகளுக்கு பல விதமான வேஷங்கள் போட்டு அந்தகுழந்தைகள் அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு அனுப்பி தங்கள் வீட்டு கொலுவுக்குவருமாறு அழைப்பு விடுப்பார்கள்.
சில வீடுகளில் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெறும். நவராத்திரி தினங்களின்போது அபிராமி அந்தாதி ஸ்லோகமோ அல்லது சவுந்தர்ய லஹரி ஸ்லோகமோஅல்லது லலிதா சகஸ்ரநாம ஸ்லோகமோ பாராயணம் செய்வது மிக நல்லது.
நவராத்திரி தினத்தில் அம்மனை துதித்தால் நினைத்தது நடக்கும். நவராத்தியில்அம்மனை பிரார்த்தித்து நலம் பல பெறுவோம்.












Click it and Unblock the Notifications