பூஜைகளும் கொண்டாட்டங்களும்...
கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த ஆண்டு விஷு ஆண்டு ஆடி மாதம் 26ம் தேதி (11.08.2001) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பொதுவாக மாலையில் 6 மணிக்கு மேல்கொண்டாடப்படுவதுதான் வழக்கம். கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்தார் என்பதால்கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
வீட்டின் வாசலில் தொடங்கி வீட்டின் பூஜை அறைவரை சிறு குழந்தையின் காலைவரைவார்கள். அந்த தெய்வக் குழந்தையான கிருஷ்ணனே தங்கள் வீட்டிற்குள்வருவதாக இதற்கு பொருள்.
கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானவை, வெண்ணெயும் அவலும்.
ஒரு முறை கிருஷ்ணரை பார்க்கச் சென்ற அவரது பால்ய நண்பரான குசேலர்.கிருஷ்ணரை பார்க்கச் செல்லும்போது அவருக்குக் கொண்டு செல்ல வீட்டில் ஏதும்இல்லாததால், கொஞ்சம் அவல் மட்டும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைச் சந்திக்கச்சென்றார்.
குசேலரை கட்டித் தழுவி வரவேற்ற கிருஷ்ணர், எனக்கு என்ன கொண்டுவந்திருக்கீர்கள் என்று கேட்க, தன் வறுமையின் வெட்கத்துடன் அவலை எடுத்துகிருஷ்ணரிடம் தந்தார்.
ஆஹா!, இவ்வளவு சுவையான அவலையா எனக்காக கொண்டு வந்தாய் என்றுகேட்டவாறு மகிழ்ச்சி பொங்க அதை உண்டான் கிருஷ்ணன்.
இங்கே கிருஷ்ணர் அவலை உண்ண உண்ண குசேலரின் குடிசை மாளிகையாக மாறிக்கொண்டிருந்தது. கிருஷ்ணன் அவல் சாப்பிட்டு முடித்தபோது குசேலர் வீட்டு வறுமைவிலகி செல்வம் தாண்டவமாடியது.
இதனால் கிருஷ்ணனுக்கு அவனுக்குப் பிடித்த வெண்ணெய் மற்றும் அவலைநிவேதனமா படைப்பது மிகச் சிறந்தது.
இது தவிர சீடை, முறுக்கு, பழங்கள் போன்றவையும் நிவேதனமாக படைக்கப்படும்.
அன்று முழுவதும் விடிய விடிய கிருஷ்ணன் புகழ் பாடும் பஜனைகளும் கோவில்களில்நடை பெறும்.
கீதை சொன்ன கண்ணனை கோகுலாஷ்டமி தினத்தன்று வழிபட்டு அவரின்அளவிலா அருள்பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.