சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை
சென்னை:
சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலங்களுக்கு வழங்கப்பட்டிருந்தஅனுமதிகளை காவல்துறை வாபஸ் பெற்றுவிட்டது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த ஊர்வலத்தில் வன்முறையைத் தூண்ட சில சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஊர்வலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த சமூகவிரோத சக்திகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனால், பொதுச் சொத்துக்களுக்கும், தனியாரின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படலாம். மேலும் உயிரிழப்புகள் கூடஏற்படலாம். இதனால், இந்த பேரணிக்குத் தரப்பட்டுள்ள அனுமதியை போலீஸ் ரத்து செய்துள்ளது.
தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல யாராவது விரும்பினால் அவர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்கப்படும்.
மிகப் பெரிய விநாயகர் சிலைகளை வைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அமைதியைப் பேணவும், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் தான் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முத்துக் கருப்பன் கூறினார்.
வருடாவருடம் நடக்கும் இந்த பேரணியில் வன்முறை வெடிப்பதும், போலீஸ் சுடுவதும் வழக்கமாகப் போய்விட்டது. இதே போலமிலாடி நபி ஊர்வலத்திலும் வருடாவருடம் பொதுமக்கள் ரத்தம் சிந்துவது வழக்கமாகிவிட்டது.
இப்போது தான் திமுக பேரணி வன்முறையில் 5 பேர் பலியாகி அந்த ரத்தத்தின் ஈரம் கூட காயாத நிலையில் அடுத்து ஒரு பேரணிரிஸ்க் எடுக்க மாநில அரசு விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்துத் தான் இந்தப் பேரணிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications