For Daily Alerts
Just In
நாளை திருப்பதி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் துளசி மாலை
பிப்ரவரி 01, 2003
நாளை திருப்பதி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் துளசி மாலை
திருப்பதி:
திருப்பதி வெங்கடேச பெருமான் ஆலயத்தில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து நாளை மிகப் பெரிய துளசி மாலை திருப்பதி கொண்டு வரப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் 9 நாள் பிரம்மோற்ஸவ திருவிழாவின்போதும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்இருந்து ஒரு துளசி மாலை திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு வெங்கடேச பெருமானுக்கு சாற்றப்படும்.
இந்தப் புனித மாலைக்கு பாரம்பரியமான வரவேற்பு அளிக்கபடும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் புதன்கிழமை நடக்கும் கருட உற்சவத்தின்போது இந்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.
Comments
Story first published: Wednesday, October 9, 2002, 16:50 [IST]