பூஜை முறைகள்
விஜயதசமி பண்டிகையன்று பல சுப நிகழ்சிகளும் தொடங்கப்படும். பல நிறுவனங்களில் புது கணக்கு துவங்குப்படும். பல புது நிறுவனங்களும் புதிதாகதொடங்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து அம்மனை பிரார்த்தித்து வெற்றி பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகள்பூஜை செய்வார்கள்.
அநீதியை அம்மன் அழித்த நாளாதலால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையில் அம்மனை வழிபடும் நாள் விஜயதசமி நாள்.
இந்த ஆண்டு(விஷு ஆண்டு) விஜயதசமி ஐப்பசி மாதம் 9ம் தேதி (26.10.2001), வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான ாரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications