திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 18: பெருமாள் கோயிலுக்கு போனால் எப்படி சாமி கும்பிட வேண்டும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்கழி மாதம் 18-ஆம் நாள் இன்று! பெருமாள் கோயிலுக்கு போனால் நேராக பெருமாளை வணங்கக் கூடாது, முதலில் தாயாரை சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைக்க முதலில் அம்மாவிடம் கேட்டால், அவர் அப்பாவிடம் நமக்கால சிபாரிசு செய்வாள். எனவே கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள்.

margazhi spirituality thiruppavai

திருப்பாவை பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: மதநீர் சிந்தும் யானைகளுக்குச் சொந்தக்காரரும், போரில் பின்வாங்காத தோள்வலிமை கொண்டவருமான நந்தகோபனின் மருமகளாக நப்பின்னையார் அறியப்படுகிறார். வாசனைமிகு கூந்தல், பூப்பந்தொத்த விரல்களைக் கொண்ட அவர் வாசலைத் திறக்குமாறு ஒரு குழுவினர் காத்திருக்கின்றனர்.

காலை வேளையின் கோழிக் கூவலும், குருக்கத்திக் கொடியில் குயில்களின் இசையும் எங்கும் பரவுகிறது. இச்சூழலில், நப்பின்னையின் கணவனைப் புகழ்ந்து பாடுவதே அக்குழுவின் நோக்கம். அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரை ஒத்த கரத்தால் அவர் கதவு திறக்க, காத்திருப்போரின் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

திருவெம்பாவை பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: சூரியனின் உதயம் நட்சத்திர ஒளியை மங்கச் செய்வதுபோல, அண்ணாமலையாரின் திருவடிகளைத் தேவர்கள் பணிந்தபோது, அவர்களது மணிமுடிகளிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. அவர் ஆண், பெண், அலி என முப்பால் வடிவங்களிலும், வானம், பூமி மட்டுமன்றி, உலகங்கள் தோறும் திகழும் சர்வவல்லமை கொண்டவராக போற்றப்படுகிறார்.

கண்ணுக்கு இனிய அமுதம் போன்ற அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் போற்றிப் பாடி, மலர்கள் மிதக்கும் புண்ணிய குளத்தில் பாய்ந்து நீராடுவது அண்ணாமலையாரின் வழிபாட்டில் ஒரு முக்கிய சடங்காக பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+