Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயிலின் அருகிலே கூடிய கூட்டங்கள் தலையா? கடலலையா? பக்தர் வெள்ளத்தில் திக்குமுக்காடும் திருச்செந்தூர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து 8 பைபர் படகுடன் கடலோர பாதுகாப்பு குழும போலிசார், மற்றும் நீச்சல் வீரர்கள் உட்பட 80 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முத்தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

7-வது நாளான இன்று கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

Tiruchendur Murugan Surasamharam

கந்த சஷ்டி திருவிழா

காலை 7 மணிக்கு யாகபூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற உள்ளது. இதனையடுத்து 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் வருகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

இதனையடுத்து 2.00 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்தி நாதருக்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின்னர் 4.30மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், அடுத்து சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் தன் வேலால் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

பக்தர்கள் கூட்டம்

இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் 4000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் உயர் கோபுரங்கள், 250 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஹெலிகேம் கேமரா இவற்றின் மூலம் கண்காணிக்க தனி கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து 8 பைபர் படகுடன் கடலோர பாதுகாப்பு குழும போலிசார், மற்றும் நீச்சல் வீரர்கள் உட்பட 80 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு தீவிரம்

அவசர தேவைகளுக்காக 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 400 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 650 தூய்மை பணியாளர்கள் பணிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 45 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+