Tirupati: திருப்பதிக்கு மே மாசம் போறீங்களா? ரூ 300 தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை மே மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாகிறது. இதை தேவஸ்தானத்தின் இணையதளத்தில் போய் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கூட்டம் இருக்கும், இருக்காது என சொல்ல முடியாத அளவுக்கு திருமலை திருப்பதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் பல்வேறு வகையான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நினைத்த நேரத்தில் திருப்பதி செல்ல வேண்டுமென்றால் இலவச தரிசனத்தில் செய்யலாம். இல்லாவிட்டால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இதை விட்டால் ஏழுமலையானை இலவச தரிசனத்திலோ அல்லது நடைபாதை வழி தரிசனத்திலோ சேவிக்கலாம். அந்த வகையில் தற்போது மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்டவைகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
அது போல் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியாகின. இதில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது. இந்த சேவைகளில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது.
அது போல் அங்கப்பிரதட்சணம் செய்ய நேற்று காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியானது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்களும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. இந்த டிக்கெட்டை புக் செய்தவர்கள் மட்டும் திருமலை அல்லது திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் புக் செய்யலாம்.
லட்சக்கணக்கில் டிக்கெட்டுகள் வெளியானாலும் அறையின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படும் என்பதால் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் ஆகும். ரூ 500 டெபாசிட் தொகை. இது நீங்கள் அறையை காலி செய்துவிட்டு சாவியை ஒப்படைத்த ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
ஒரு வேளை அறை கிடைக்காவிட்டால், கீழ் திருப்பதியில் விடுதிகளில் அறைகளை புக் செய்து கொள்ளலாம். எனவே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திலோ TTD செயலியிலோ புக் செய்து கொள்ளலாம்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications