உலகமே வியக்குது.. ஆச்சரியமூட்டும் நெல்லையப்பர் கோயில்.. திருநெல்வேலியில் "சத்தம்" கேட்குதா? அடடடே
நெல்லை: நெல்லையப்பர் திருக்கோயில் இன்றுவரை உலக அதிசயமாக விளங்கி கொண்டிருக்க காரணம் என்ன தெரியுமா?
திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில், 7ம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பும், பழமையும் வாய்ந்த திருத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய பரப்பளவில் 2 பெரிய கோயிலாக அமைந்துள்ள இந்த திருக்கோயிலில், கோயிலுக்கு உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் அமைந்திருக்கிறது. வருடாவருடம் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆனித்திருவிழா போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
மூலவர்: இங்குள்ள நெல்லையப்பர் கோவில் மூலவர் சுயம்புலிங்கமாக தோன்றியவர் என்பார்கள்.. அதேபோல, மூலவரின் தலையில் வெட்டுக்காயம் ஒன்றும் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அதாவது, அரண்மனைக்கு பால் ஊற்றும் பால்காரர், ஒருமுறை அந்த வழியாக வரும்போது, அங்கிருந்த கல்லில், அவரது கால் இடறிவிட்டது.. இதில் கையில் வைத்திருந்த பால் அனைத்தும், அந்த கல்லின் மீது கொட்டி விட்டதாம்.. இதுபோலவே, ஒவ்வொருமுறையும், அந்த கல் தடுக்கி, பால் கொட்டியவண்ணம் இருந்தது.
வெட்டுக்காயம்: உடனே மன்னரின் உதவியுடன் அந்த கல்லை அகற்ற முயற்சித்தபோது, அந்த கல்லில் கோடாரி பட்டு, ரத்தம் கொட்டியிருக்கிறது. வானில் ஒலித்த அசரீரியின் படி, தலையின் இடது பக்கம் வெட்டுக்காயத்துடன் சிவலிங்கம் திடீரென வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான் மூலவரின் தலையில் வெட்டு காயம் இன்றும் இருப்பதாக சொல்கிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த நெல்லையப்பர் கோவிலில் இன்னொரு அதிசயமும் உள்ளது.. இங்குள்ள கல் தூணை வெறும் கைகளினால் தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கின்றன..
இசைத்தூண்கள்: 3 பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலின், 2ம் பிரகாரத்தில் ஏழிசை சுரங்களை எழுப்பும் இந்த இசைத்தூண்கள் அமைந்திருக்கின்றன.. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு இசையை எழுப்புகிறது.
பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றியிருக்கும் சின்ன தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை மணி போன்ற இசைக்கருவிகளின் சத்தமும் கேட்க முடிகிறது. அந்த காலத்தில் திருவிழாக்களின்போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களில்தான் இசைத்திருக்கிறார்கள்.
பாறை தூண்கள்: பொதுவாக, இசை என்பது காற்றை உள்வாங்கி, அதன்மூலம் வெளியாகும் ஒலி வடிவமாகவே கருதப்படுகிறது.. ஆனால், கடினமான இந்த பாறை தூண்களுக்குள் காற்று எப்படி உள்ளே செல்ல முடியும்? வெறும் கல்லுக்குள் எப்படி 7 ஸ்வரங்களும் சத்தம் எழுப்ப முடியும்? அதுவும் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லாத அந்த காலத்தில் இந்த தூண்களை எப்படி உருவாக்க முடியும்? எப்படி வடிவமைத்திருப்பார்கள்? என்பதெல்லாம் இன்றுவரை புரியாத புதிராக, ஆச்சரியமாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.
ஒருமுறை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள், இதுகுறித்து ஆய்வு செய்தார்கள்.. இந்த தூண்களின் வடிவமைப்பு மற்றும் தூண்களிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இசைத்தூண்கள்: தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால், இந்த ஒலி உருவாகிறதாக ஆய்வில் தெரியவந்தது. அதாவது, ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்கிறார்கள். எனினும், இந்த தூண்கள் குறித்து முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இதுபோன்ற இசைத்தூண்கள் உலகில் எங்குமே கிடையாது என்பதே நெல்லையப்பர் கோயிலின் அதிசயமாக விளங்கி கொண்டிருக்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications