Ayudha Pooja 2025 Nalla Neram: இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி?
சென்னை: நவராத்திரியின் கடைசி நாளான இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களான கத்தி, அரிவாள், மிக்ஸி, கிரைண்டர், அம்மிக்கல், ஆட்டுக்கல், பூட்டு, மின் மோட்டார், புத்தகங்கள் உள்ளிட்டவைகளுக்கு பூஜை போட உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம்.
புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியது. இதையொட்டி பலர் தங்கள் வீடுகளில் கொலு வைத்துள்ளனர். இந்த நவராத்திரி இன்று ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்று அவசியம் என்பதே இந்த மூன்று மூன்றாக பிரித்து வழிபடுவதன் நோக்கமாகும்.
9 நாட்கள்
அரக்கன் மகிஷாசுரனை அழிக்க அனைத்து தெய்வங்களிடம் இருந்து அன்னை பெற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ததாக ஐதீகம். இதனால்தான் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜை போடும் வழக்கம் வந்தது. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று அம்பிகை மகிஷனை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளாகும்.
என்ன செய்யலாம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளில் என்னென்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், வீடு, வாசல், நிலை கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை துடைத்து அவற்றிற்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
நிலை வாசலில்
நிலை வாயிலிலும் சாமி அறையிலும் மாவிலை தோரணம் கட்டிவிட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை செய்யும் முன்பு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும்.
மஞ்சள் குங்குமம்
அதாவது மஞ்சளிலோ அல்லது மாட்டு சாணத்திலோ பிள்ளையார் பிடித்து வைத்து அதில் மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். கல்வியில் சிறந்த சரஸ்வதி தேவியை வணங்க புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
எதற்கெல்லாம் பூஜை
அது போல் அரிவாள் மனை, கத்தி, சுத்தியல், கட்டிங் பிளையர், கத்தரிகோல், பூண்டு நசுங்கும் இடி கல், குழவி கல், சப்பாத்தி போடும் கட்டை என நாம் என்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும். அது போல் மோட்டார், லிப்ட் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
இயந்திரங்களுக்கு பூஜை
வீட்டில் இருக்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் உங்கள் தொழிலுக்கு பிரதானமாக பயன்படுத்தும் பொருளை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். அது போல் பஸ், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம், சைக்கிள், கார் உள்ளிட்டவைகளையும் துடைத்து பூ, பூஜை செய்யலாம். வாகனங்கள், இயந்திரங்களுக்கு சந்தனத்தை கரைத்து தெளித்து அதில் பொட்டு வைக்க வேண்டும்.
வாழை கன்று
தேவைப்பட்டால் வாழை கன்றை கட்டலாம். பின்னர் சுண்டல் செய்து, பொரி கடலை, பழங்கள் வைத்து தேங்காய் உடைத்து படைக்க வேண்டும். சுவாமிக்கு தனி பூஜையும் வாகனங்கள், மோட்டார், கடைகளுக்கு தனி பூஜையும் போட வேண்டும்.
சுண்டல் கடலை
ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனியே பொரி கடலை, சுண்டல் வைக்க வேண்டும். வாகனங்களின் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை முடிந்ததும் ஓட்டி பார்க்க வேண்டும். அதுபோல் வாகனங்களுக்கு சுத்தி போட வேண்டும்.
உகந்த நேரம்
இந்த ஆண்டு இன்றைய தினம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் பூஜை செய்யலாம். மாலையில் பூஜை போடும் வழக்கம் இருப்போர், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.
மேலும் காலை 9 டூ 10, மதியம் 1.30 டூ 3, மாலை 4 டூ 5, இரவு 6 டூ 10 ஆகிய நேரங்களிலும் பூஜை செய்யலாம். அவரவருக்கு எப்போது தோதுபடுகிறதோ அந்த நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications