தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?
திருப்பதி: தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மக்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். ஏராளமானோர் திருப்பதி சென்றுவிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இது தவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து ஷெட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை இரவு வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ , காபி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள், குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படுகிறது. கோயிலில் நேற்று முன் தினம் 66,782 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண கட்டாவில் 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்
அன்றைய தினம் ஒரு நாள் உண்டிகை காணிக்கை ரூ 3 கோடியே 71 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் விடுமுறையையடுத்து ரயில்கள், பஸ்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications