தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?
திருப்பதி: தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மக்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். ஏராளமானோர் திருப்பதி சென்றுவிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இது தவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து ஷெட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை இரவு வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ , காபி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள், குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படுகிறது. கோயிலில் நேற்று முன் தினம் 66,782 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண கட்டாவில் 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்
அன்றைய தினம் ஒரு நாள் உண்டிகை காணிக்கை ரூ 3 கோடியே 71 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் விடுமுறையையடுத்து ரயில்கள், பஸ்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications