Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

spirtuality thirupathi bakrid


நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மக்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். ஏராளமானோர் திருப்பதி சென்றுவிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இது தவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து ஷெட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை இரவு வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ , காபி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள், குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படுகிறது. கோயிலில் நேற்று முன் தினம் 66,782 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண கட்டாவில் 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்

அன்றைய தினம் ஒரு நாள் உண்டிகை காணிக்கை ரூ 3 கோடியே 71 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தொடர் விடுமுறையையடுத்து ரயில்கள், பஸ்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+