மகாலட்சுமி அருளால் கடன் தொல்லை நீங்கி.. பண மழை கொட்டப் போகுது! உங்கள் வீட்டில் இதைப் பண்ணுங்க!
சென்னை: எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் மகாலட்சுமி. திருமகளின் அடையாளங்களான ஐந்து வகைப் பொருள்களை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் கடன் தொல்லை நீக்கும், செல்வம் பெருகும், பண மழை கொட்டும். மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். திருமகள் என்று அழைக்கப்படும் லட்சுமி மிகவும் பொறுமை மிக்கவள் என்றும், அனைவருக்கும் நன்மையே தருவாள் என்றும் அதர்வண வேதத்தில் கூறப்படுகிறது. நித்திய சுமங்கலியாக, மஞ்சள் பட்டுடுத்தி காட்சிதரும் லட்சுமி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளைப் போக்குபவதில் வல்லவள்.

லட்சுமியை அனுதினமும் மனதார வேண்டிவர சுமங்கலித்துவமும், செல்வ வளமும் பெருகும். இனிப்பு என்பது மகாலட்சுமிக்கு உகந்ததாகும். திருமணம் நடக்கும் இடங்கள், யாகசாலைகள் ஆகியன லட்சுமியின் இருப்பிடங்கள். எனவே, இந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு இனிப்பு வழங்குவதை முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் மூலம் வாழ்க்கை தித்திப்பாக அமையும் என்பது ஐதீகம்.
பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் மகலாட்சுமியின் அடையாளங்கள் என்று ஞானநூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பொருள்களும் இருக்கும் வீட்டில் லட்சுமி குடியேறி நிரந்தரமாக வாசம் செய்வாள். கடலில் இருந்து பிறந்த உப்பும் லட்சுமிக் கடாட்சம் நிறந்ததாகும். யானைகள், வில்வம், பசுக்கள் ஆகியவையும் திருமகளின் அருள் நிறைந்த செல்வங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் சுபிக்ஷத்தை பறைசாற்றுகின்றன.
திருமகளின் அடையாளங்களான இந்த ஐந்து பொருள்களையும் வீட்டில் வைத்து மகலாட்சுமியை வழிபட்டு வர கடன் தொல்லை நீங்கி, அந்த வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தினந்தோறும் தீபங்களை ஏற்றி வழிபட்டு வர லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி ஸ்தோத்திரத்தை தினமும் கூறி திருமகளை வழிபட்டால் உள்ளத்தில் எழுந்தருளுவாள் மகாலட்சுமி. இதன் வாயிலாக வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
லட்சுமி ஸ்தோத்திரம்: கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம. கிருஷ்ணப்பிரியாயை ஸததம் மஹாலஷ்ம்யை நமோ நம. பதம்பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம. பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம. எனும் திருமகள் ஸ்தோத்திரத்தை தினமும் கூறி வர மகலாட்சுமியின் அருள் கிட்டும்.
அதேபோல, மகலாட்சுமி அருளும் தலங்களை வழிபட்டு வந்தால் வளமான வாழ்க்கையைப் பெறலாம். சிவன் ஆலயங்களில் வடமேற்கில் மகலாட்சுமியின் சந்நிதி அமைந்திருக்கும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருமகளுக்கென தனி சிறு ஆலயமே உள்ளது. இவரது அருகிலேயே சரஸ்வதி சந்நிதியும் உள்ளது. இந்த ஆலயத்தில் முன் மண்டபத்தில் துர்கையும் உள்ளார். எனவே, முப்பெருந்தேவியையும் ஒன்றாக தரிசிக்கும் வாய்ப்பு இக்கோயிலில் உள்ளது.
வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருள்களை வழங்குவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் என்பதும் ஐதீகம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications