மகாலட்சுமி அருளால் கடன் தொல்லை நீங்கி.. பண மழை கொட்டப் போகுது! உங்கள் வீட்டில் இதைப் பண்ணுங்க!
சென்னை: எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் மகாலட்சுமி. திருமகளின் அடையாளங்களான ஐந்து வகைப் பொருள்களை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் கடன் தொல்லை நீக்கும், செல்வம் பெருகும், பண மழை கொட்டும். மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். திருமகள் என்று அழைக்கப்படும் லட்சுமி மிகவும் பொறுமை மிக்கவள் என்றும், அனைவருக்கும் நன்மையே தருவாள் என்றும் அதர்வண வேதத்தில் கூறப்படுகிறது. நித்திய சுமங்கலியாக, மஞ்சள் பட்டுடுத்தி காட்சிதரும் லட்சுமி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளைப் போக்குபவதில் வல்லவள்.

லட்சுமியை அனுதினமும் மனதார வேண்டிவர சுமங்கலித்துவமும், செல்வ வளமும் பெருகும். இனிப்பு என்பது மகாலட்சுமிக்கு உகந்ததாகும். திருமணம் நடக்கும் இடங்கள், யாகசாலைகள் ஆகியன லட்சுமியின் இருப்பிடங்கள். எனவே, இந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு இனிப்பு வழங்குவதை முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் மூலம் வாழ்க்கை தித்திப்பாக அமையும் என்பது ஐதீகம்.
பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் மகலாட்சுமியின் அடையாளங்கள் என்று ஞானநூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பொருள்களும் இருக்கும் வீட்டில் லட்சுமி குடியேறி நிரந்தரமாக வாசம் செய்வாள். கடலில் இருந்து பிறந்த உப்பும் லட்சுமிக் கடாட்சம் நிறந்ததாகும். யானைகள், வில்வம், பசுக்கள் ஆகியவையும் திருமகளின் அருள் நிறைந்த செல்வங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் சுபிக்ஷத்தை பறைசாற்றுகின்றன.
திருமகளின் அடையாளங்களான இந்த ஐந்து பொருள்களையும் வீட்டில் வைத்து மகலாட்சுமியை வழிபட்டு வர கடன் தொல்லை நீங்கி, அந்த வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தினந்தோறும் தீபங்களை ஏற்றி வழிபட்டு வர லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி ஸ்தோத்திரத்தை தினமும் கூறி திருமகளை வழிபட்டால் உள்ளத்தில் எழுந்தருளுவாள் மகாலட்சுமி. இதன் வாயிலாக வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
லட்சுமி ஸ்தோத்திரம்: கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம. கிருஷ்ணப்பிரியாயை ஸததம் மஹாலஷ்ம்யை நமோ நம. பதம்பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம. பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம. எனும் திருமகள் ஸ்தோத்திரத்தை தினமும் கூறி வர மகலாட்சுமியின் அருள் கிட்டும்.
அதேபோல, மகலாட்சுமி அருளும் தலங்களை வழிபட்டு வந்தால் வளமான வாழ்க்கையைப் பெறலாம். சிவன் ஆலயங்களில் வடமேற்கில் மகலாட்சுமியின் சந்நிதி அமைந்திருக்கும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருமகளுக்கென தனி சிறு ஆலயமே உள்ளது. இவரது அருகிலேயே சரஸ்வதி சந்நிதியும் உள்ளது. இந்த ஆலயத்தில் முன் மண்டபத்தில் துர்கையும் உள்ளார். எனவே, முப்பெருந்தேவியையும் ஒன்றாக தரிசிக்கும் வாய்ப்பு இக்கோயிலில் உள்ளது.
வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருள்களை வழங்குவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் என்பதும் ஐதீகம்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications