வாஸ்து டிப்ஸ்.. உங்க வீட்டில் பணம் நிரந்தரமாக தங்கணுமா? செல்வம் செழிக்கணுமா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க
சென்னை: வீட்டுக்குள் செல்வம் கொழிக்க வேண்டுமானால், ஒரு சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பார்கள்.. இதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. ஆன்மீக காரணமும் உண்டு. அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலும், வீடுகளில் பணம் செழிக்க வேண்டுமானாலோ அல்லது பணம் தங்கியிருக்க வேண்டும் என்றாலோ முக்கிய வாஸ்து செடிகளை வீடுகளில் வளர்ப்பது பெருகி வருகிறது.

சுத்தமான காற்று: பொதுவாக, மரம், செடிகள் நம்முடைய வீட்டை சுற்றி இருப்பது மிகப்பெரிய ஆரோக்கியம்.. அதிக ஆக்சிஜன் உற்பத்தி செய்து தரும் மலர்களையும், செடிகளையும் இப்படி வளர்க்கலாம்.. இவைகள் அதிக ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் இருக்கும்.
அதேபோல, வீடுகளுக்குள்ளும் சிலவகையான செடிகளை வளர்க்கலாம்.. சில செடிகளை வீட்டில் வளர்த்தால், அது வீட்டில் பிரச்சனைகளையும், இழப்பையும் ஏற்படுத்தும். அதே சமயம் சில செடிகளை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியும் பெருகிவிடும்.
மணி பிளான்ட்: உதாரணத்துக்கு மணி பிளான்ட்டை எடுத்துக் கொண்டால், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும். டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.
தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்களை வைத்தால், கடன் பிரச்சனைகள் தீருவதுடன், செல்வம் வந்து சேரும் என்றும் கூறுகிறார்கள். வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்கக் கூடாதாம்.
மல்லிப்பூ: பணத்தை அதிகரிக்கும் மங்களகரமான செடியாக மல்லிகை செடியையும் கருதுகிறார்கள்.. வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நன்மைதரக் கூடியதாம்..
எங்கெல்லாம் நல்ல வாசனை உள்ளதோ, அங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டுவதுடன், நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்து, செல்வத்தையும் பெருக்குவதாக நம்பப்படுகிறது.
தொட்டால்சிணுங்கி: வாஸ்துப்படி, தொட்டால் சிணுங்கியும் அதிர்ஷ்டமான செடியாக விளங்குகிறது. இந்த செடியை வாடிவிடாமல், தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டுமாம்.. இதனால், ராகு தோஷம் நீங்கும் என்பார்கள். அதேபோல, விஷ்ணு மற்றும் சிவனை நினைத்து வழிபடுவதற்காகவே வளர்க்கப்படும் செடி சங்குப்பூ செடி.. அதிலும் நீல நிற சங்குப்பூ செடி என்றால், அதை கட்டாயம் வீட்டில் வளர்ப்பார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை பெருகுமாம்.
வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வைக்கலாம். லட்சுமிதேவிக்குரியதாகவே துளசி செடி கருதப்படுகிறது.. எனவே, வீட்டு முற்றத்தில் துளசி செடிகளை வைக்க வேண்டும்.. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. துளசியின் மணம் வீட்டை நிரப்பி கொண்டேயிருக்கும்.. பாசிட்டிவ் ஆற்றலும் வீட்டுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
கருப்பு ஊமம்: கருப்பு அல்லது வைலட் கலர் ஊமத்தை செடியையும் வீடுகளில் வளர்க்கலாம். இந்த செடி, சிவனுக்கு உரியதாக நம்பப்படுகிறது. எனவே, பாலாபிஷேகம் செய்து, துளசி செடியை போலவே இந்த செடிகளையும் வணங்கி வரலாம். இதனால், பண வரவு கிடைப்பதுடன், பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.
பாம்பு செடி வீட்டில் வளர்த்தாலும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்குமாம். இந்த செடிகளை படிக்கும் அறை அல்லது படுக்கும் அறைகளில் வைக்க வேண்டுமாம்..
தென்னை மரம்: தென்னை மரங்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.. தென்னை மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குடும்பத்திலுள்ளவர்களின் முன்னேற்றம் அனைத்து வழிகளிலுமே இருக்கும். எனவே, வீட்டில் தென்னை மரம் வளர்க்க இடம் இருந்தால், அதையும் நட்டு வைத்து வளர்க்கலாம்.
ஆலுவேரா என்று சொல்லக்கூடிய கற்றாழை செடிகளையும் வீட்டில் வைக்கலாம்.. இதனால், நேர்மறை ஆற்றலை கொண்டுவருவதுடன், காற்றை சுத்திகரிக்கும் குணங்களை கொண்டது கற்றாழை செடி.
படுக்கையறை: படுக்கையறையில் நிறைய செடிகளை வளர்க்க தேவையில்லை. ஆனால், ஜாஸ்மின், லாவெண்டடர், மூங்கில், பீஸ் லில்லி போன்ற தாவரங்களை மட்டுமே படுக்கையறைகளுக்குள் வைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
ஆனால், வீடுகளுக்குள் வளர்க்கவே கூடாது என்று சொல்லக்கூடிய செடிகள் எது தெரியுமா? பருத்தி செடியை வீட்டில் வைக்க வேண்டாம் என்கிறார்கள்.. காரணம் துர்திரஷ்டம் வீட்டுக்குள் வந்துவிடுமாம்.. அதேபோல, போன்சாய், பருத்தி செடிகள், புளி, அத்திப்பழம், போன்றவைகளையும் வீட்டில் வளர்க்கக்கூடாது என்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications