அன்புக்குரியவர்களே இருந்தாலும்! இறந்தால் இந்த பொருட்களை எல்லாம் நாம் வீட்டில் வைத்திருக்கவே கூடாது!
சென்னை: இறந்தவர்களின் இந்த 4 பொருட்களை மட்டும் வீட்டில் வைக்கவே கூடாது, ஏன் தெரியுமா?
வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நிறைய சடங்குகளை செய்து அவர்களை பெரியவர்களுடன் சேர்த்து வைப்பது வழக்கம். அப்போதுதான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்பார்கள்.

அந்த 13 நாட்களில் வீட்டில் செய்யும் சாங்கியத்தால் அவர்கள் படிப்படியாக விண்ணுலகை அடைவார்கள் என சொல்வார்கள். ஆன்மா நம் உடலை விட்டு செல்லும் போது என்னென்ன நடக்கும் என்பதை கருடபுராணத்தை படித்தாலே தெரியும்.
இறந்தவர்களின் ஞாபகமாக சில பொருட்களை அந்த குடும்பத்தினர் பத்திரமாக வைத்திருப்பர். ஆனால் இறந்தவர்களின் பொருட்களில் சில 4 பொருட்களை வீட்டிலேயே வைக்கக் கூடாது என்கிறார்கள். இவற்றை வைத்திருந்தால் வாழ்க்கையில் ஒருவருக்கு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பதாலும் இந்த பிரச்சினைகள் எழும் என்கிறார்கள் ஜோதிடர்கள். அந்த குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் இருந்து தூக்கி எறிவதன் மூலம் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் நிம்மதியான வாழ்வை வாழலாம்.
அந்த பொருட்களை எரிக்கவோ அல்லது நீர் நிலைகளிலோ போட்டு விட்டு வர வேண்டும். அது போல் இறந்தவர்களின் பொருட்களை பிறர் அணியவே கூடாது என்கிறார்கள். அதிலும் அவர்களுடைய உடை, அணிகலன்களை அணியக் கூடாது. இறந்தவர்களின் காலணிகள், கைக் கடிகாரங்கள் என எந்த பொருட்களையும் பயன்படுத்தவே கூடாது.
ஒரு வேளை தங்கமாக இருந்தால் அதை கடையில் கொடுத்து உருக்கி அதிலிருந்து வேறு புதிய நகையை செய்து கொள்ளலாம். ஆனால் அப்படியே அவர்கள் அணிந்ததை நாம் அணியக் கூடாது. எல்லாவற்றிலும் முக்கியமானது இறந்தவர்களின் பாய், பெட், தலையணை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவே கூடாது.
இறந்தவர்களை புதைக்கவோ எரிக்கவோ கொண்டு சென்றவுடன் அவர்களை படுக்க வைத்திருந்த பாய், தலையணைகளை குப்பையில் போட்டுவிடுவதை பார்த்துள்ளோம். எனவே அந்த தலையணைகளையோ பாய்களையோ நாம் வைத்துக் கொள்ளவே கூடாது. அந்த பொருட்களை எரிப்பதோ நீர் நிலைகளில் கொண்டு போய் போட்டுவிடவோ வேண்டும். அதை அப்படியே வீட்டில் வைத்திருந்தால் தீய சக்திகளின் தாக்கம் அதிகரிக்கும்.
எனவே தான் இறந்தவுடன் அவர்களுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்து முடித்தல் என்பது அவசியமானதாகும். இதில் எந்த குறையையும் வைக்கக் கூடாது. இறந்தவர்களின் உடலை எந்த சேதாரமும் இல்லாமல் நல்லபடியாக கொண்டு போய் சேர்த்தல் நல்லது. அது போல் சாவு வீட்டில் சண்டை சச்சரவுகள் செய்வது பாவம் என்பார்கள். இறந்த நாள் முதல் 13 நாட்களுக்கு அசைவ உணவுகளை கண்டிப்பாக உண்ணவே கூடாது. கொள்ளி வைத்தவர், வாழை இலையில்தான் சாப்பிட வேண்டும். தட்டில் சாப்பிடவே கூடாது. இப்படி ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications